தன்னைப் பார்க்க விரும்புபவர்களுக்கு புதுவிதமான நிபந்தனையை அளித்திருக்கின்றார் கங்கனா .
ஹிமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரணாவத் போட்டியிட்டு 74 ஆயிரத்து 755 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி ரசிகர்கள் மற்றும் அவரின் ஆதரவாளர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தன்னை சந்திக்க வரும் தொகுதி மக்கள் அனைவரும் ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும் என்ற வித்தியாசமான ஒரு நிபந்தனையை வைத்திருக்கின்றார் கங்கணா.
நேற்று மண்டி தொகுதியில் உள்ள பஞ்சாயத்து பவனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் எம் பி கங்கனா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் நான் மண்டி தொகுதியில் இருக்கும் நாட்களில் இந்த பஞ்சாயத்து பவனில் நடைபெறும் நிகழ்ச்சியின் வழியாக மக்களின் குறைகளை கேட்டு அறிந்து கொள்ள முயற்சிப்பேன். இந்த தொகுதியில் இருக்கும் ஒவ்வொரு நேரத்தையும் என் தொகுதி மக்களுக்காக அர்ப்பணிக்க விரும்புகிறேன்.
இந்த இடத்தில் என் தொகுதி மக்களை தவிர வேறு யாரையும் நான் சந்திக்க விரும்பவில்லை. அதனால் என் தொகுதி மக்கள் என்னை பார்க்க வரும் போது ஆதார் அட்டையை கொண்டு வந்தால் அவர்கள் தான் என் தொகுதி மக்கள் என்பதை நான் எளிதில் அறிந்து கொள்ள முடியும். எனவே என்னை சந்திக்க வரும் போது அனைவரும் அவர்களின் குறைகளை பேப்பரில் எழுதி கையோடு ஆதார் அட்டையையும் கொண்டு வாருங்கள். உங்களின் பிரச்சனைகளுக்கு விரைவில் நான் தீர்வு கண்டுபிடிப்பேன்” என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வருகிறாது சாம்சங் இந்தியா பிரைவேட் லிமிடட் நிறுவனம். இங்கு சாம்சங் நிறுவன தயாரிப்புகள் உற்பத்தி…
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இரானி கோப்பை இறுதிப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் மும்பை அணியும், ரெஸ்ட் ஆஃப் இந்திய…
இந்தியாவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் கொண்ட போட்டி தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது…
நடிகர் விஜய் தனது அறுபத்தி ஒன்பதாவது படத்தின்றகான அறிவிப்பை வெளியிட்டு , பட ஷூட்டிங்கிற்கான பூஜைகள் நேற்று சென்னையில் சிறப்பாக…
தினசரி கோவில்களுக்கு செல்லும் பழக்கம் பலரிடம் இருந்து வந்தாலும், முக்கிய நாட்கள், பண்டிகை தினங்கள் அன்று இறை வழிபாட்டிற்கு முக்கியத்துவதும்…
தமிழகத்தில் வட-கிழக்கு பருவ மழை விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக…