Categories: indialatest news

எது மாதிரியும் இல்லாத புது மாதிரி… கேரள போலீஸை உலுக்கிய வழக்கு!

தமிழக – கேரள எல்லையான களியக்காவிளையில் காரில் கழுத்தறுப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட நபரின் கொலை வழக்கு கேரள போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த குவாரி உரிமையாளர் தீபு சோமன். இவர் ஜேசிபி வாகனம் வாங்குவதற்காகக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து 10 லட்ச ரூபாயுடன் தமிழ்நாடு கிளம்பி வந்திருக்கிறார். ஆனால், தமிழக எல்லையான களியக்காவிளை அருகே காரில் கழுத்தறுபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து கொலை வழக்குப் பதிந்த கேரள போலீஸார், அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த வழக்கில் தீபு சோமனின் நண்பர் என்று சொல்லப்படும் அம்பிலி என்கிற சஜிகுமாரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கைதான அம்பிலி, தீபு சோமனின் திட்டப்படியே அவரைத் தான் கொலை செய்ததாகவும் அவரின் அறிவுறுத்தலின்படியே அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் பிளேடு, கையுறை உள்ளிட்டவைகளைப் பயன்படுத்தியதாகவும் போலீஸில் கூறியிருக்கிறார். மேலும், தீபுவின் அறிவுறுத்தலின்படியே, காரில் இருந்து இறங்கி நொண்டி நொண்டி நடந்ததாகவும் கொலைக்குப் பின் தனது ஆடைகளை வீட்டருகே வைத்து எரித்ததாகவும் சொல்லியிருக்கிறார்.

ஆனால், அம்பிலியின் வாக்குமூலத்தை நம்பாத போலீஸார் பணத்தைக் கொள்ளையடிக்கும் நோக்கிலேயே தீபுவுடன் நட்பு பாராட்டியிருக்கலாம் என்று கருதுகிறார்கள். மேலும், தீபுவிடம் இருந்து எடுக்கப்பட்ட 10 லட்ச ரூபாயில் அம்பிலியின் வீட்டில் இருந்து ரூ.7.5 லட்சத்தையும் போலீஸார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். அத்தோடு, அம்பிலிக்கு அறுவைச் சிகிச்சை பிளேடு, மயக்க மருந்து உள்ளிட்டவைகளைக் கொடுத்து உதவிய சுனில் குமார் என்பவரையும் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

AKHILAN

Recent Posts

நடிகர் ரஜினியின் உடல் நிலை…விரைவில் நலனடைய குவியும் வாழ்த்துகள்…

தமிழ் சினிமா மற்றுமன்றி இந்தியத் திரை உலகத்திலேயும் முன்னனி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். பஸ் கண்டக்டராக இருந்தவர் தனது திறமையாலும்,…

43 mins ago

தங்கம் வாங்க நேரம் இது தானா?…வீழ்ச்சியில் விற்பனை விலை…

கடந்த செப்டம்பர் மாதம் முழுவதுமாகவே தடுமாற்றத்தை சந்தித்து வந்தது சென்னையில் விற்கப்பட்டு வந்த இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின்…

1 hour ago

உதயநிதியை சந்தித்த நடிகர் சிவகார்த்திக்கேயன்…துணை முதல்வருக்கு வாழ்த்து…

தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் அன்மையில் செய்யப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக…

2 hours ago

கன மழைக்கான வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் எது எது?…வானிலை ஆய்வு மையம் சொன்ன அப்-டேட்…

குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேலடுக்கு வளி மண்டங்களில் குளிர்ச்சியான நிலை நிலவுவதன் காரணமாகவே தமிழகத்தில் மழை பெய்யத் துவங்கியது…

3 hours ago

டெஸ்ட் கிரிக்கெட்…இலக்கு எளியது….கோப்பை இந்தியாவுக்கு?…

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது வங்கதேச கிரிக்கெட் அணி. மூன்று இருபது ஓவர் போட்டி தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட்…

4 hours ago

ரேஷன் கார்டில் முக்கிய அப்டேட் செய்ய மறந்துட்டீங்களா, அடுத்து என்ன ஆகும் தெரியுமா?

இந்தியாவில் அரசு சார்பில் ஏராளமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மிகமுக்கிய திட்டங்களில் ஒன்றாக ரேஷன் திட்டம் உள்ளது. இந்தத்…

5 hours ago