Categories: indialatest news

வயநாடு சோகம்…உதவ முன் வர பினராயி விஜயன் கோரிக்கை…முந்தும் தமிழ் நடிகர்கள்…

வயநாடு நிலச்சரிவில் சிக்கி நூற்றி எழுபதுக்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் இந்தியாவையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கேரளாவில் முகாமிட்டு மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மண்ணில் புதைந்த நிலையில் உள்ள சடலங்களை மீட்கும் பணி தொடர்ச்சியாக நடந்து வர, பலியானவர்களை அடையாளம் கண்டு பிரேத உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி நடந்தும் வருகிறது. முகம் சிதைந்த நிலையில் இருக்கும் உடல்களை அடையாள காணுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Surya Jyothika Karthi

இந்த துயரத்திற்கு பலியான பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் மூலம் உடல் அடையாளம் கண்டுபிடிக்கும் பணியும் தொடர்கிறது. இந்நிலையில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கம் வாயிலாக கோரிக்கையை வைத்துள்ளார்.

“சோக காலங்களில், அனைவரும் கை கோர்ப்பது ஒற்றுமையின் தூய்மையான வடிவம், யாரும் துன்பங்களைத் தனியாக எதிர்கொள்ள மாட்டார்கள். ஒவ்வொரு பங்களிப்பும் முக்கியமானது, அதன் அளவு வித்தியாசப்பட்டாலும் நிச்சயம் முன்னேற்றம் ஏற்படும்” என சொல்லி, உதவிக்கரம் நீட்ட முன் வருவோர் பரிவர்த்தனை நடத்த வேண்டிய வங்கி விவரங்களை வெளியிட்டுள்ளார்.

அதன் படி கணக்கு எண் – 67319948232, பெயர் – முதல்வரின் பேரிடர் நிவாரண நிதி (Chief Minister’s Distress Relief Fund), வங்கி – பாரத ஸ்டேட் வங்கி, கிளை – City Branch, Thiruvananthapuram
IFSC – SBIN0070028 என விவரங்களை வெளியிட்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான சூர்யா -ஜோதிகா தம்பதி, சூர்யாவின் சகோதரரும் நடிகருமான கார்த்தி ஆகியோர் கூட்டாக இணைந்து நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐம்பது லட்ச ரூபாயை நிவாரண நிதியாக வழங்கியிருக்கின்றனர். நடிகர் விக்ரமும் தனது பங்களிப்பை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

sankar sundar

Recent Posts

ஹர்பஜன் சொன்னது பொய்.. உண்மையை உடைத்த CSK பிசியோ

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிசியோதெரபிஸ்ட் வெளுத்து வாங்கியுள்ளார். முன்னதாக எம்.எஸ்.…

29 mins ago

ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பர் லின்க் செய்வது இவ்வளவு ஈசியா?

தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி,…

20 hours ago

நாலு நாளைக்கு நச்சு எடுக்கப் போகுதா மழை?…அப்போ அலர்டா இருக்கனுமா?…

தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது…

20 hours ago

பி.எஃப் பணத்தை எடுக்கப் போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..

வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) தனிப்பட்ட காரணங்களுக்கு எடுத்துக் கொள்வோருக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் பி.எஃப்.…

20 hours ago

தற்கால வீரர்களில் இவர் மட்டும் தான்.. மிரட்டி விட்ட விராட்..!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட்…

20 hours ago

குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் கொடியேற்றம்..பன்னிரெண்டாம் தேதி சூரசம்ஹாரம்…

நவராத்தி நாட்களில் மாலை அணிவித்து அம்மனுக்கு விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருபவர்கள் பலரும் உண்டு. வீடுகளில் கொலு வைத்து…

20 hours ago