இன்ஸ்டாகிராம் ட்ரோலால் மனமுடைந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் விபரீத முடிவெடுத்திருக்கிறார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த திர்க்கனாபுரம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் அப்பகுதியில் உள்ள பள்ளியில் +2 படித்து வந்தார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இயங்கிவந்த அவருக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள்.
இவர் ஒரு இளைஞரை காதலித்து வந்ததாகவும், கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், அந்த இளைஞர் இந்த இளம் பெண்ணின் இன்ஸ்டா போஸ்ட்களில் நெகட்டிவாக கமெண்டுகள் இட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அதைப்பார்த்த இவரது மற்ற சில ஃபாலோயர்ஸும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களைத் தட்ட, அதைப் பார்த்து மனமுடைந்த நிலையிலேயே இருந்திருக்கிறார் அந்த இளம் பெண். இதனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். அவரை மீட்ட பெற்றோர் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அந்த இளம்பெண் உயிரிழந்தார். இதுகுறித்து சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை மற்றும் விருதுநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.…
தமிழ் சினிமா மற்றுமன்றி இந்தியத் திரை உலகத்திலேயும் முன்னனி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். பஸ் கண்டக்டராக இருந்தவர் தனது திறமையாலும்,…
கடந்த செப்டம்பர் மாதம் முழுவதுமாகவே தடுமாற்றத்தை சந்தித்து வந்தது சென்னையில் விற்கப்பட்டு வந்த இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின்…
தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் அன்மையில் செய்யப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக…
குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேலடுக்கு வளி மண்டங்களில் குளிர்ச்சியான நிலை நிலவுவதன் காரணமாகவே தமிழகத்தில் மழை பெய்யத் துவங்கியது…
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது வங்கதேச கிரிக்கெட் அணி. மூன்று இருபது ஓவர் போட்டி தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட்…