Categories: Cricketlatest news

மூன்றாவது டி20 – சாஹலை பின்னுக்குத் தள்ளி வேற லெவல் சாதனை படைத்த குல்தீப் யாதவ்..!

இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சாதனை படைத்து புதிய மைல்கல் எட்டியுள்ளார். டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு அதிவேகமாக 50 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை குல்தீப் யாதவ் பெற்று இருக்கிறார்.

டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக முப்பது போட்டிகளில் விளையாடி இருக்கும் குல்தீப் யாதவ் 50 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். இதன் மூலம் டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு அதிவேகமாக 50 விக்கெட்களை வீழ்த்திய வீரராக யுஸ்வேந்திர சாஹலை முந்தியுள்ளார்.

Kuldeep Yadav

இலங்கை அணியின் மர்மமான சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை வைத்திருக்கிறார். இவர் இந்த மைல்கல்லை வெறும் 26 போட்டிகளில் விளையாடி எட்டியுள்ளார். மிகக் குறைந்த பந்துகளில் 50 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் மென்டிஸ்-யே சாரும். இதனை இவர் 600 பந்துகளில் எட்டியுள்ளார்.

போட்டியை பொருத்தவரை குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்களையும், அக்சர் பட்டேல் மற்றும் முகேஷ் ஷர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். முதலில் ஆடிய வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு பிரான்டன் கிங் 42 பந்துகளில் 42 ரன்களையும், ரோவன் பொவெல் 19 பந்துகளில் 40 ரன்களையும் வீழ்த்தி அசத்தினர்.

டாஸ் வென்ற வெஸ்ட் இன்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு கைல் மேயர்ஸ் மற்றும் பிரான்டன் கிங் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். எனினும், இந்திய அணி பவுலர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை வீழ்த்தினர்.

இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இன்டீஸ் அணி ஐந்து விக்கெட்கள் இழப்புக்கு 159 ரன்களை குவித்தது. 160 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுகமானார்.

Kuldeep Yadav 1

துவக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஜோடி அணிக்கு சுமாரான துவக்கத்தையே கொடுத்தது. அறிமுக போட்டியில் களமிறங்கிய ஜெய்ஸ்வால் ஒரு ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய மற்றொரு துவக்க வீரர் சுப்மன் கில் ஆறு ரன்களுக்கு நடையை கட்டினார்.

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 44 பந்துகளில் 83 ரன்களை குவித்து அல்சாரி ஜோசப் பந்தில் விக்கெட்டை பறிக்கொடுத்தார். இவருடன் ஜோடி சேர்ந்த திலக் வர்மா தன் பங்கிற்கு 37 பந்துகளில் 49 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்திய அணி கேப்டன் ஹர்திக் பான்டியா 15 பந்துகளில் 20 ரன்ளை குவித்தார். இதன் மூலம் இந்திய அணி வெற்றி இலக்கை 17.5 ஓவர்களிலேயே எட்டியது. போட்டி முடிவில் இந்திய அணி ஏழு விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மூன்றாவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி இழக்காமல் உள்ளது. முதல் இரண்டு டி20 போட்டிகளில் வெஸ்ட் இன்டீஸ் அணி வெற்றி பெற்றதை அடுத்து, மூன்றாவது வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும் முனைப்பில் வெஸ்ட் இன்டீஸ் அணி களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பர் லின்க் செய்வது இவ்வளவு ஈசியா?

தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி,…

3 hours ago

நாலு நாளைக்கு நச்சு எடுக்கப் போகுதா மழை?…அப்போ அலர்டா இருக்கனுமா?…

தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது…

3 hours ago

பி.எஃப் பணத்தை எடுக்கப் போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..

வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) தனிப்பட்ட காரணங்களுக்கு எடுத்துக் கொள்வோருக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் பி.எஃப்.…

3 hours ago

தற்கால வீரர்களில் இவர் மட்டும் தான்.. மிரட்டி விட்ட விராட்..!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட்…

4 hours ago

குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் கொடியேற்றம்..பன்னிரெண்டாம் தேதி சூரசம்ஹாரம்…

நவராத்தி நாட்களில் மாலை அணிவித்து அம்மனுக்கு விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருபவர்கள் பலரும் உண்டு. வீடுகளில் கொலு வைத்து…

4 hours ago

இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை – ICC

இலங்கை அணி கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒரு ஆண்டு விளையாடுவதற்கு தடை விதித்த சம்பவம் பரபரப்பை…

4 hours ago