எத்தனையோ வழக்குகளை நீதிமன்றங்கள் பார்த்திருக்கும். அதிலும் கணவன் மனைவிக்குள் மனம் ஒப்புக் கொள்ளாமல் விவாகரத்து கேட்டு படியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பல காரணங்கள் இருக்கிறது.
ஆனால் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகும் ஒரு விவகாரத்து வழக்கு குறித்து கேட்கும்போது பலருக்கு ஆச்சரியத்தினை விட அதிர்ச்சியே மேலோங்கி இருக்கிறது. ஒரு தம்பதி தங்களுடைய திருமணம் முடிந்து மூன்று நிமிடத்தில் விவகாரத்து செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் தான் அது.
2019ம் ஆண்டு குவைத்தை சேர்ந்த ஒரு தம்பதி திருமணம் செய்து கொண்டுள்ளனர். நண்பர்கள் புடை சூழ திருமணம் முடிந்து இருவரும் வீட்டிற்கு கிளம்பிய நிலையில் மணப்பெண் தவறுதலாக படிகளில் இடறி விழுந்துள்ளார். ஆனால் அவருக்கு கை கொடுத்து தூக்காத மணமகன் எல்லோருக்கும் முன் முட்டாள் பார்த்து நடக்க மாட்டியா என கேட்டிருக்கிறார்.
இதைக் கேட்டு மணமகள் பெரிய அளவில் அதிர்ச்சியாகி விடுகிறார். இப்போதே இப்படி பேசுபவர் பின்னால் என்னென்ன பேசுவார் என பயந்தார். உடனே நீதிமன்றத்தை நாடி தனக்கு விவாகரத்து வேண்டும் என கேட்டு இருக்கிறார். இதையடுத்து, நீதிபதிகளும் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உடனே அவருக்கு விவாகரத்து வழங்கியும் உத்தரவிட்டனர்.
இதை எடுத்து இவர்களின் திருமண உறவு மூன்று நிமிடங்களில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோல, 2004ம் ஆண்டு பிரிட்டனில் நடந்த திருமணம் 90 நிமிடங்கள் மட்டுமே நிலைத்தது. பின்னர் தம்பதிகளும் விவாகரத்து பெற்றனர். அவர்களை தாண்டி மிகக்குறைந்த ஆயுள் கொண்ட திருமண உறவு இதுதான் என சமூகவலைதளத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…