Categories: latest newstamilnadu

திருப்பத்தூரை பயமுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது!.. பொதுமக்கள் நிம்மதி…

சமீபகாலமாகவே தமிழகத்தின் சில இடங்களில் சிறுத்தை மற்றும் புலிகள் பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு வருவதும், மக்களை தாக்குவது, கால்நடை விலங்குகளை இழுத்து செல்வது என அட்ராசிட்டி செய்து வருகிறது.

இந்நிலையில், நேற்று திருப்பத்தூர் சாம நகர் பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், ஒரு அரசு பள்ளி அமைந்துள்ளது. அதன் அருகே கலெக்டர் அலுவலகம், ரயில் நிலையம் என மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளாக இருக்கிறது.

இந்நிலையில்தான், நேற்று மதியம் 3 மணியளவில் சிறுத்தை ஒன்று அங்கு நடமாடுவதை சிலர் பார்த்து அதிர்ந்து போனார்கள். உடனே அவர்கள் திருப்பத்தூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். எனவே, அந்த பகுதிக்கு சென்ற வனத்துறையினர் முதலில் அது சிறுத்தை என நம்பவில்லை. காட்டுப்பூனையாக இருக்கலாம் என்றே நினைத்தார்கள்.

ஆனால், அவர்கள் கண்ணிலும் சிறுத்தை படவே அதிர்ச்சி அடைந்த அவர்கள் அதை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களிடமிருந்து தப்பித்து ஓடிய சிறுத்தை கலெக்டர் அலுவகத்திற்கு பின்புறம் உள்ள மேரி இமாகுலேட் மகளிர் மேல்நிலை பள்ளிக்குள் நுழைந்தது. மேலும், அங்கு பெயிண்ட் அடித்து கொண்டிருந்த கோபால் என்பவரின் நெற்றி, காது பகுதிகளில் தாக்கிவிட்டு ஒரு இடத்தில் சென்று பதுங்கியது.

பள்ளிக்குள் சிறுத்தை புகுந்ததால் அது மாணவிகளை தாக்கிவிடும் என அங்கிருந்த சிலர் கூச்சலிட்டனர். இதனால் அங்கு பதட்டமும், பதற்றமும் ஏற்பட்டது. இதையடுத்து, மாணவிகளை வகுப்பறையின் உள்ளே வைத்து ஆசிரியர்கள் பூட்டிவிட்டனர். வகுப்புகளின் கதவை திறக்க வேண்டாம். மாணவிகளை வெளியே அனுப்ப வேண்டாம் என வனத்துறை எச்சரித்தனர். இந்த தகவல் திருப்பத்தூர் முழுவதும் பரவவே நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பயத்தில் அந்த பள்ளிக்கு வந்துவிட்டனர்.

அப்போது சிறுத்தை 10 அடி உயரமுள்ள ஒரு சுவரை தாண்டி குதித்து அருகில் இருந்த கார் நிறுத்தும் பகுதிக்கு சென்றது. இதைப்பயன்படுத்தி மாணவிகள் பத்திரமாக வெளியே வரவழைக்கப்பட்டு அவர்களின் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர். கார் ஷெட்டில் பதுங்கி இருந்த சிறுத்தை மீது மயக்க ஊசி செலுத்தினர். இதனால், சிறுத்தை மயக்கமடைந்தது. அதன்பின் சிறுத்தையை கூண்டில் ஏற்றினர். 10 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்ததால் பொதுமக்களும், வனத்துறையினரும் நிம்மதி பெருமூச்சி விட்டனர்.

Murugan M

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

40 mins ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

1 hour ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

3 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

4 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

4 hours ago