Categories: latest newstamilnadu

கடந்த 100 நாட்களில் மதுரையில் 194 சிறுமிகளுக்கு நடந்த பிரசவம்… வெளியான அதிர்ச்சி தகவல்

மதுரை மாவட்டத்தினை சேர்ந்த 194 சிறுமிகளுக்கு கடந்த 100 நாளில் பிரசவம் நடந்ததாக வெளியாகி இருக்கும் தகவலால் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் சமீபகாலமாக இளம்வயதில் திருமணம் செய்துக்கொள்ளும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது பெற்றோர் செய்து வைக்கும் திருமணங்கள் மட்டுமல்லாது காதல் திருமணம் செய்துகொள்வோரும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றனர்.

கடந்த 100 நாட்களில் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் 194 சிறுமிகளின் பிரசவம் நடந்து இருக்கிறது. இதில் மதுரை மாநகராட்சியில் மட்டும் 49 பிரசவம் வரை நடந்ததாக கூறப்படுகிறது. இது சமூகத்துக்கு பெரிய விபரீதத்தினை உருவாக்கும். இதனால் பள்ளிகள், மருத்துவத்துறை, பெற்றோர்கள், சமூகநலத்துறை இணைந்து செயலாற்ற வேண்டும்.

18 வயதுக்குள் கீழ் பெண்கள் யாரும் பிரசவத்துக்காக அரசு மருத்துவமனையிலோ, தனியார் மருத்துவமனையிலோ சேர்ந்தால் உடனே சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு மனநல ஆலோசனை கொடுத்து சிறப்பு வகுப்பு எடுக்க வேண்டும் என தமிழக அரசு சுற்றறிக்கை விடுத்தது. ஆனால் இதுவரை எந்த வித வகுப்புகளும் நடத்தப்படாமலே இருக்கிறது. இதனால் அரசு கொடுத்த ஆலோசனையை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் சமூக செயல்பாட்டாளர் வெரோனிகா ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.

AKHILAN

Recent Posts

வாக்களிக்க ஆர்வம் காட்டிய வாக்காளர்கள்…கலைகட்டிய ஜம்மு – காஷ்மீர் தேர்தல்…

ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…

15 hours ago

இந்த சேஞ்சுக்கு இவங்க தான் காரணம்…கை காட்டிய கம்பீர்…

கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…

17 hours ago

ப்ரோட்டா பிரசாதம்!….கோவில் திருவிழாவில் நடந்த விநோதம்…

பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…

18 hours ago

விரக்தியில் பேசும் பேச்சு…தமிழிசைக்கு திருமாவளவன் பதிலடி…

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…

19 hours ago

ஆதார், பான் போன்ற அரசு ஆவணங்களை வாட்ஸ்அப்-லேயே பெறலாம் – எப்படி தெரியுமா?

இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…

19 hours ago

நானெல்லாம் ஆஷஸ் விளையாடவே முடியாது போல.. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ஆஸி வீரர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…

20 hours ago