Categories: indialatest news

அடுத்த 3 நாட்கள்…. யாரும் வீட்டை விட்டு வெளியில வராதீங்க… முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு…!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யும் என்பதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்ற மாநிலம் முதல்வர் தெரிவித்து இருக்கின்றார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மும்பையில் 6 மணி நேரத்தில் 300 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பேருந்து, ரயில் சேவைகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மும்பையின் பல நகரங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அது மட்டும் இல்லாமல் ரயில் சேவைகள், விமான சேவைகள் என அனைத்துமே பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை எதிரொலியாக 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கனமழை நிலவரம் குறித்து மும்பை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று பார்வையிட்டார்.

இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் தெரிவித்திருந்ததாவது “குறைந்த நேரத்தில் நிறைய மழை பெய்து இருக்கின்றது. ரயில் தண்டவாளங்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம். கடற்கரைக்கு அருகில் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று காவல்துறையினரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.

முனிசிபாலிட்டி கார்ப்பரேஷன்களில் 461 மோட்டார் பம்புகள், ரயில்வேயில் 200 பம்புகள் வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகின்றது. அனைத்து துறைகளுடனும் தொடர்பு கொண்டு உள்ளேன். மத்திய மற்றும் துறைமுக ரயில் சேவைகள் தொடங்கியுள்ளன. ராணுவம் கடற்படை மற்றும் விமானப்படையினர் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது” என்று தெரிவிக்கின்றார்.

Ramya Sri

Recent Posts

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

19 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

20 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

23 hours ago

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…

24 hours ago

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…

1 day ago

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…

1 day ago