அதிர்ஷ்டம் என்பதை எல்லோரும் விரும்புவார்கள். அதனால்தான் சுலபமாக பணம் கிடைக்கும் விஷயத்தை நோக்கி பலரும் ஓடுகிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை இங்கே லாட்டரி டிக்கெட், குதிரை ரேஸ், கிரிக்கெட் பெட்டிங்ம், சீட்டாட்டாம் என சில விஷயங்கள் இருக்கிறது. பல கிளப்கள் இருக்கிறது.
ஆனால், வெளிநாடுகளில் பல வகையான சூதாட்டங்கள் இருக்கிறது. இதில் கேசினோ என்பது மிகவும் பிரபலம். நிறைய பணம் கட்டி விளையாட வேண்டும் என்பதாலும் பெரும் பணக்காரர்கள் அதாவது கோடீஸ்வரர்கள் விளையாடும் சூதாட்டம் இது. இதில், பல கோடி பணமும் வரும். பல கோடிகள் கையை விட்டும் போகும்.
எல்லாவற்றையும் ஏற்கும் மனநிலை வேண்டும். அப்போதுதான் கேசினோ போன்ற சூதாட்டங்களை ஆட முடியும். இந்நிலையில், இந்த சூதாட்டத்தில் கிடைத்த வெற்றி ஒருவரின் உயிரையே பறித்திருக்கிறது. சிங்கப்பூரில் இருக்கும் பணக்காரர்களில் ஒருவர் நேற்று மரினா பே சாண்ட்ஸ் கேசினோவுக்கு விளையாட போனார்.
முடிவில் 4 மில்லியன் டாலர்களை வென்றார். இந்திய மதிப்பில் 35 கோடி. அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே கீழே சரிந்து விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர். ஆனாலும், அவர் கண் விழிக்கவில்லை. திடீரென ஏற்பட்ட அதிர்ச்சியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
https://x.com/itisprashanth/status/1805643862708564450
தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…
இந்திய - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்து வருகிறது. மழை குறுக்கீடு,…
தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. இதனையடுத்து ஆளுநர் முன்பு பதவி ஏற்பு விழாவும் நடந்து முடிந்தது. முன்னாள் அமைச்சர்…
தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்றிருந்தனர். அமலாக்கத்துறை வழக்கிலிருந்து ஜாமீனில் விடுதலையான செந்தில் பாலாஜி…
இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது வங்கதேச ஆடவர்…
மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS) மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) ஆகியவற்றின் கீழ்,…