குழந்தைகளுக்கு ஆசையாய் வாங்கிய பிஸ்கட்டில் இரும்பு கம்பி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய சூழலில் நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் கலப்படம் இருக்கின்றது. சமீப நாட்களாக கடைகளில் இருந்து வாங்கும் பொருள்களில் பூச்சிகள், பூரான் உள்ளிட்ட பொருள்கள் இருப்பது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனிதனின் கட்டைவிரல் இருந்தது. அதைத் தொடர்ந்து தயிர் பாக்கெட்டில் பூரான் இருந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தரமான பொருட்களை தயாரித்துக் கொடுக்கும்படி வேண்டுகோள் கொடுத்து வந்தார்கள்.
அதாவது நாம் சாப்பிடும் பொருட்களை இப்படி தரம் மற்ற முறையில் தயாரித்து வந்தால் அதை சாப்பிடும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் வாய்படுவார்கள் என்பதை யோசிக்காமல் நிறுவனங்கள் இப்படி தரமற்ற முறையில் உணவுகளை தயாரிப்பது நியாயமற்றது என்று கூறி வந்தார்கள். இந்நிலையில் மற்றொரு சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
அதாவது தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் வசிக்கும் அனுமன் ரெட்டி என்ற நபர் தனது குழந்தைகளுக்காக போர்பன் பிஸ்கட் ஒன்றை வாங்கி வந்திருக்கின்றார். அந்த பிஸ்கட்டை பிரித்து அதிலிருந்து பிஸ்கட் ஒன்றை எடுத்து சாப்பிடும் போது மெல்லிய கம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதன் ஆபத்தை உணர்ந்து வருத்தமடைந்த அனுமன் ரெட்டி பிஸ்கட்டில் இரும்பு கம்பி இருப்பதை வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த பலரும் குழந்தைகள் சாப்பிடும் பிஸ்கட்டில் இது போன்ற பொருட்கள் இருப்பது மிகவும் ஆபத்தானது என்று கூறி வருகிறார்கள்.
சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர…
இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…
ஐக்கிய அரபு எமீரகத்தில் பெண்களுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தது. தொடர் துவங்கும் முன்னர்…
18-வது முறையாக இரட்டை சதம் அடித்து புஜாரா சச்சின், பிராட்மேன் போன்ற ஜாம்பவான் பட்டியலில் இணைந்திருக்கின்றார். 90-வது ரஞ்சி கோப்பை…
பிட்னஸ் இல்லாமல் இருந்த வீரரை மும்பை அணி ரஞ்சி கோப்பை அணியில் இருந்து விடுத்து விட்டதாக இருக்கின்றது. இந்திய அணியின்…
நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு யுபியை பேமெண்ட்க்கு பதிலாக யுபிஐ வாலட்டை பயன்படுத்துவது தான் நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.…