Categories: latest newstamilnadu

தலைமை செயலகத்தில் வேலை வாங்கி தராங்களா? நம்பாதீங்க அது மோசடி!

தலைமை செயலத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 22.5 லட்சம் மோசடி செய்த நபரை ஆவடி காவல்துறை கைது செய்து இருக்கிறது. 

2018ம் ஆண்டு சென்னை செங்குன்றத்தில் வசித்து வந்த 52 வயதாகும் ராஜ்பாபு, சென்னை தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக முத்தரசன் என்பவரிடம் கூறி அவர் ஆசையை தூண்டி இருக்கிறார். இதை நம்பிய முத்தரசன் தனக்கு வேலை வாங்கி தரக்கூடிய அவரிடம் 2.5  லட்ச ரூபாயை கொடுத்திருக்கிறார்..

அதுமட்டுமல்லாமல் தனக்கு தெரிந்த சிலருக்கும் வேலை வாங்கி தர வேண்டும் என அவரிடம் சென்று பேச அவர்களுக்கும் வேலை வாங்கி தருவதாக ராஜ் பாபு நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதை அடுத்து அவர்கள் ஒன்பது பேரும் சேர்ந்து தலா 2.5 லட்ச ரூபாய் என  மொத்தமாக 22.5 லட்சத்தினை ராஜ்பாபுவுக்கு கொடுத்துள்ளனர்.

ஆனால் நாட்கள் கடந்து மாதங்கள் கடந்து வருடங்கள் ஆகியும் ராஜ் பாபு காரணத்தை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக அனைவரும் உணர ராஜ் பாபுவை தொல்லை செய்து இருக்கின்றனர். இதனால் அவர்களிடம் 11 லட்சம் ரூபாயை மட்டுமே கொடுத்திருக்கிறார்.

இதில் மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் உடனே ஆவடி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தெரியாதவர்களிடம் வேலை கிடைப்பதற்கு முன்னால் பெரிய அளவில் தொகை கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

AKHILAN

Recent Posts

தலைமை பொறுப்புக்கு வர வாரிசாக இருக்க வேண்டும்…வானதி சீனிவாசன் விமர்சனம்…

பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திராவிட முன்னேற்றக்…

14 hours ago

அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற செந்தில் பாலாஜி…பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்…

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் கோரிக்கை குறித்த மனுக்களை…

14 hours ago

விராட் கோலிக்கு வந்த சோதனை…தள்ளிப்போகும் சாதனை?…

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.  இந்த…

15 hours ago

விரைவில் அமைச்சரவை கூட்டம்.. அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.. புது அப்டேட்

இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில்…

23 hours ago

ஐபிஎல் 2025: CSK-க்கு சாதகமான Retention ரூல்ஸ்.. எம்.எஸ். டோனி ரிட்டன்ஸ்..!

ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025…

24 hours ago

INDvsBAN 2வது டெஸ்ட்: ஒன்பது ஆண்டுகளில் இதுதான் முதல் முறை, இன்றைய ஆட்டம் நடக்குமா?

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…

1 day ago