பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நாளுக்கு நாள் பரபரப்பை அதிகரித்து வரும் நிலையில், இன்று இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தினை பெற்று கொடுத்துள்ளனர்.
நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் இன்றைய போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் கிடைத்திருக்கிறது. மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் தென் கொரியாவின் வோன்ஹோ லீ மற்றும் ஜின் யே ஓ ஜோடியை எதிர்கொண்டது.
இதில் 16-10 என்ற புள்ளி கணக்கில் வென்று வெண்கல பதக்கத்தினை வென்றுள்ளனர். மனு பாக்கர் ஏற்கனவே மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டர் பிரிவில் வெண்கல பதக்கத்தினை வென்று ஒலிம்பிக்ஸ் 2024ல் இந்தியாவின் கணக்கினை துவங்கி வைத்தார்.
இந்நிலையில் ஒரே ஒலிம்பிக்ஸ் போட்டியில் இரண்டு பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சிறப்பை பெற்று இருக்கிறார் மனு பாக்கர். மேலும், இந்தியாவில் இருந்து துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற ஆறாவது வீரர் என்ற பெருமையை சரஜ்ஜோத் சிங் பெற்று இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…
கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…
பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…
இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…