Categories: Cricketlatest news

ஏமாற்றமாகத் தான் இருக்கு.. ஆனாலும் வாழ்த்துக்கள்.. ஆர்.சி.பி. முன்னாள் பயிற்சியாளர் உருக்கம்..!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளராக ஆன்டி ஃபிளவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது பற்றிய அறிவிப்பு ஆகஸ்ட் 4 ஆம் தேதி வெளியானது. ஆர்.சி.பி. அணியின் கிரிக்கெட் நிர்வாக இயக்குனர் ஹெசன் மற்றும் தலைமை பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் செயல்பட்டு வந்தனர். இந்த இருவரின் பதவிக்காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவுக்கு வந்தது.

Mike-Hessen-Sanjay-bangar

எனினும், ஆர்.சி.பி. நிர்வாகம் இருவரின் பணிக்காலத்தை நீட்டிக்காமல், புதிய பயிற்சியாளரை நியமனம் செய்து இருக்கிறது. அதன் படி புதிய பயிற்சியாளர் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொடர்ந்து மைக் ஹெசன் தனது இன்ஸ்டாகிராமில் ஆர்.சி.பி. அணியில் இருந்து விடைபெறுவது குறித்த பதிவை பகிர்ந்து இருக்கிறார். இது குறித்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது..,

“கடந்த நான்கு சீசன்களில் மூன்று முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய போதிலும், எங்களால் கோப்பையை வென்றிட முடியவில்லை. அனைத்து வீரர்கள், ஒத்துழைப்பு பணியாளர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரின் ஆசை, ஆர்.சி.பி. கோப்பை வெல்வது தான். ஆர்.சி.பி.யை விட்டு விலகுவது ஏமாற்றம் அளித்த போதிலும், களத்திலும், களத்தின் வெளியிலும் அணியிருடன் பல நினைவுகளை பெற்று இருக்கிறேன்.”

Andy-Flower-RCB-Coach

“எனக்கு வாய்ப்பளித்த அணி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, ஆர்.சி.பி.-க்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய பயிற்சியாளர் குழுவுக்கும் வாழ்த்துக்கள். இறுதியில் ஆர்.சி.பி. ரசிகர்கள், நீங்கள் தொடர்ச்சியாக ஆதரவளித்து வந்துள்ளீர்கள். அணி மீது அன்பு கொண்டிருக்கின்றீர்கள். மேலும் வீட்டில் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றீர்கள், இதற்காக உங்களுக்கு நன்றி,” என்று தெரிவித்தார்.

 

தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் அணி பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் ஆன்டி ஃபிளவர் முன்னதாக கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். இதோடு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார். இதன் மூலம் லக்னோ அணி தொடர்ச்சியாக இரண்டு சீசன்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

admin

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

2 hours ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

3 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

4 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

5 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

6 hours ago