latest news
இஸ்லாமியருக்கு ஒரு இனிப்பான செய்தி.. ஹஜ் பயணிகளுக்கு ரூ.25,000.. அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு..!
![hajj - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/hajj.jpg)
ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்து இருக்கின்றார்.
ஹஜ் பயணம் என்பது இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் ஒரு புனித பயணம். இஸ்லாமியர்களாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்நாளில் தங்கள் கடமைகளில் ஒன்றாக சவுதி அரேபியாவில் இருக்கும் மெக்காவிற்கு புனித பயணம் செல்வதை கருதுகிறார்கள். வருடம் தோறும் பல இஸ்லாமியர்கள் மெக்காவிற்கு ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் ஹஜ் பயணித பயணம் மேற்கொள்வது வழக்கம்தான்.
தமிழ்நாட்டில் இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து கொடுக்கின்றது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 5801 பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய 326 பேருக்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் விமான நிலையத்திற்கு சென்று அவர்களை வரவேற்று இருந்தார்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது “இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்று ஹஜ் பயணம். இந்த கடமையை நிறைவேற்ற தமிழ்நாட்டில் இருந்து 5801 பேர் பயணம் மேற்கொண்டு இருக்கிறார்கள். முதல்வர் முக ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் ஹஜ் கமிட்டி சார்பாக அவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தோம்.
தற்போது பயணத்தை மேற்கொண்டு விட்டு தமிழகம் திரும்பிய முதல் குழுவினரை வரவேற்கிறோம். அது மட்டும் இல்லாமல் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நபருக்கும் இந்த ஆண்டு முதல் 25 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த இருக்கிறோம்” என்று அவர் பேசியிருந்தார்.
![](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/05/info-4.png)
latest news
90 மி.லி, பிளாஸ்டிக்கா இல்ல கண்ணாடி பாட்டிலா…? தமிழக அரசு பரிசீலினை… அவங்களே விட்டாலும் இவங்க விடமாட்டாங்க போலயே…
![tasmac - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/tasmac.jpg)
90 மில்லி லிட்டர் மதுபானத்தை எந்த பாட்டிலில் விற்பனை செய்வது என்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் சாப்பிட்டு சுமார் 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். அரசு விற்பனை செய்யும் மது பாட்டில்களை விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு வசதி இல்லாத ஏழை மக்கள் இது போன்ற குறைந்த விலையில் கிடைக்கும் கள்ளச்சாராயங்களை குடித்து வருகிறார்கள். இதனால் தமிழக அரசு குறைந்த விலையில் டெட்ரா பேக் என்ற மது விற்பனையை செய்ய வேண்டும் என்று குரல் எழுந்தது.
இதற்கு பலரும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தார்கள். ஏற்கனவே கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழகத்தில் கள்ளச்சாராயர் சாவு அரங்கேறியதை தொடர்ந்து 100 மில்லி லிட்டர் ரூபாய் 15 என்கின்ற மலிவு விலையில் மது விற்பனையை தொடங்கியது தமிழக அரசு. அதன் பின்னர் அந்த திட்டம் நாளடைவில் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் அந்த திட்டத்தை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கின்றது.
தமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டு வர வேண்டும் என்பது பலரது விருப்பம். ஆனால் தற்போது அது இல்லை என்பதை சட்டசபையில் அமைச்சர் முத்துசாமி கூறிவிட்டார். இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் கூறிய போது நமது பக்கத்து மாநிலங்களில் அதாவது கேரளா, கர்நாடகம், ஆந்திரா என அனைத்து மாநிலங்களிலும் மது விற்பனை நடைபெறும் போது நாம் மட்டும் எப்படி பற்றி கொள்ளாத கற்பூரமாக இருக்க முடியும் என்று கூறியிருந்தார்.
இதை வைத்து பார்க்கும் போது தமிழகத்தில் பூரண மதுவிலக்கு இப்போது இல்லை என்பது உறுதியாகிவிட்டது. எனவே ஏழை மக்கள் கள்ளச்சாராயம் வாங்குவதற்கு பதில் குறைந்த விலையில் மது பானங்களை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இதனால் 90 மில்லி லிட்டர் மது விற்பனையை தொடங்க உள்ள நிலையில், அதனை கண்ணாடி பாட்டிலில் அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் விற்பனை செய்யலாமா என்று பரிசீலித்து வருகின்றது. கடைசியில் பிளாஸ்டிக் பாட்டில் தான் சிறந்த முறை என்பது தெரியவந்தது. ஆனால் இந்த திட்டம் குறித்த பரிசீலனை ஆரம்ப கட்டத்தில் தான் இருப்பதாகவும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
india
மீண்டும் மீண்டுமா… 15 நாட்களில்; 10-வது சம்பவம்- பதறும் பீகார்!
![bridge collapse - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/bridge-collapse.jpg)
பீகாரில் மேலும் 3 பாலங்கள் இடிந்துவிழுந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது கடந்த 15 நாட்களில் 10-வது சம்பவமாகும்.
பீகாரின் சைவான் மற்றும் சம்பன் மாவட்டங்களில் நிகழ்ந்த இந்த சம்பவங்களில் நல்வாய்ப்பாக யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இடிந்துவிழுந்த 3 பாலங்களும் 30 முதல் 80 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவை என அம்மாநில பொதுப்பணித்துறை தெரிவித்திருப்பதோடு, இதுகுறித்த துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கிறது.
ஒரே நாளில் 4 பாலங்கள் இடிந்து விழுந்தும் முதலமைச்சர் நிதீஷ் குமார் இதுகுறித்து வாய் திறக்காதது ஏன் என எதிர்க்கட்சியான ஆர்ஜேடியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதற்கிடையே, பீகாரில் உள்ள பழைய பாலங்கள் மற்றும் சாலைகள் குறித்து ஆய்வினை உடனடியாக நடத்த சாலைப் போக்குவரத்துத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறைக்கு முதலமைச்சர் நிதீஷ் குமார் உத்தரவிட்டிருக்கிறார். இதுகுறித்து பேசிய ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் செயலாளர் சைத்தன்ய பிரசாத், `இடிந்து விழுந்த பாலங்கள் மற்றும் அவற்றின் பகுதிகள் போன்றவை மிகவும் பழமையானவை’ என்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
மேலும், `உரிய பாதுகாப்பு மற்றும் உறுதித் தன்மையோடு அவை கட்டப்படவில்லை என்றும், அந்தப் பாலங்கள் கட்டப்படும்போது போதுமான அளவுக்கு அஸ்திவாரங்கள் தோண்டப்படவில்லை. இதனாலேயே, இந்த மழைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் அவை அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன’ என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக, சைவான் மாவட்டத்தின் தியோரியா பகுதியில் இருந்த பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதன்பின்னர், தெக்ரா பகுதியில் உள்ள மற்றொரு பாலமும் இதேபோல் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவத்தில் யார் பொறுப்பாளி என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் பீகாரில் வலுத்துவருகிறது.
latest news
இன்னைக்கு மிஸ்ஸே ஆகாது… ஜூலை மாதம் டமால், டுமில் தான்… வெதர்மேன் சொன்ன அசத்தல் ரிப்போர்ட்!..
![rain 1 - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/rain-1.jpg)
நேற்று தமிழகத்தில் பல பகுதிகளில் மலை வெளுத்து வாங்கிய நிலையில் சென்னையில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை நேற்று இரவு முழுவதும் கொட்டி தீர்த்து விட்டதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து இருக்கின்றார்.
தமிழகத்தில் அதுவும் சென்னையில் நேற்று பகல் பொழுதில் வெயில் வாட்டி வதைத்தது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கடுமையான புழுக்கம் இருந்தது . அதைத் தொடர்ந்து நேற்று இரவு குளிர்ந்த காற்று வீசு தொடங்கி கனமழை கொட்டி தீர்த்து விட்டது. இடி மின்னலுடன் மலை வெளுத்து வாங்கியதால் வானிலை இதமான சூழலுக்கு மாறியது .
விட்டுவிட்டு பெய்த மழையால் சென்னை வளசரவாக்கம், கோடம்பாக்கம், போரூர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதை தொடர்ந்து மழை குறித்து தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டு இருக்கின்றார். அதில் ஜூலை மாதத்தில் பெய்ய வேண்டிய மொத்த மழையின் அளவு 10 சென்டிமீட்டர்.
அதில் நேற்று பெய்த மழையில் ஒரு மணி நேரத்திலேயே 6 cm மழை பதிவாகிவிட்டதாக கூறியிருந்தார். ஜூன் மாதம் 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் தான் மழைப்பொழிவு அதிகமாக இருந்தது என்று தெரிவித்தார். மேலும் நேற்று அவர் வெளியிட்ட பதிவில் இன்று மிஸ் ஆகாது. காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பகுதிக்களில் ஜூலை மாதம் டமால் டுமீல் என்று மழை தொடங்கும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதைப்போலவே நேற்று இரவு நகரின் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. அது மட்டும் இல்லாமல் கும்மிடிப்பூண்டி, தாம்பரம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. நுங்கம்பாக்கம் ரோகித் டி20 சாதனையை சமன் செய்ததாக மிகவும் கிண்டலாக கூறி இருந்தார். அதிவேகமாக 50 அடித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 30 நிமிடங்களுக்குள் 50 மில்லி மீட்டர் அடித்து ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்து விட்டது என்று அவர் பதிவிட்டு இருந்தார்.
india
வேலை நேரத்துல ரீல்ஸ்… சிக்கலில் 8 கேரள அரசு ஊழியர்கள் 8 பேர்!
![reels - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/reels.jpg)
கேரளாவின் இன்ஸ்டா ரீல்ஸ் போட்ட திருவல்லா நகராட்சி ஊழியர்கள் 8 பேருக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள நகராட்சிதான் திருவல்லா. நகராட்சியைச் சேர்ந்த 8 ஊழியர்கள் இன்ஸ்டாவில் பாட்டுப் பாடி, டான்ஸ் ஆடிய ரீல்ஸ் ஒன்று சமீபத்தில் வைரலானது. அலுவலக வளாகத்தில் வைத்து எடுக்கப்பட்ட இந்த ரீல்ஸ் வைரலானது, அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து தகவலறிந்த திருவல்லா நகராட்சியின் செயலாளர், அலுவலக நேரத்தில் ரீல்ஸ் போட்டது ஏன் என்று விளக்கம் கேட்டு ஊழியர்கள் 8 பேருஜ்க்கும் ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இந்த நோட்டீஸுக்கு அவர்கள் 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்.
`அலுவலக நேரத்தில் ரீல்ஸ் போட்டதாகத் தெரியவந்த தகவலை அடுத்து அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இதில் என்னுடைய கடமையை மட்டுமே செய்திருக்கிறேன்’ என்று நகராட்சியின் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.
அதேநேரம், அலுவலக வேலை நேரத்தில் ரீல்ஸ் போடவில்லை என்றும் பணி இடைவெளியின்போதுதான் ரீல்ஸ் செய்ததாகவும் அந்த ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட நேரத்தில் மக்கள் பணி எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
Cricket
கையில் உலக கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணி… உற்சாக வரவேற்பு…!
![rohit - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/rohit.jpg)
கையில் உலக கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-ல் நடைபெற்ற டி20 உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இதன் மூலம் 17 வருடங்கள் கழித்து இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றுள்ளது.
சாதனை படைத்த இந்திய வீரர்கள் தாயகம் திரும்ப இருந்த நிலையில் புயல் மற்றும் மழை காரணமாக இந்திய திரும்ப முடியாமல் பார்படாசியில் சிக்கி தவித்தனர். இந்நிலையில் நேற்று இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலமாக பார்படாசிலிருந்து இந்தியா புறப்பட்டனர் . இன்று காலை இந்திய அணி வீரர்கள் டெல்லிக்கு வந்தடைந்தனர். டெல்லி விமான நிலையத்தின் இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
மேலும் உலக கோப்பையுடன் தாயகம் திரும்பி இருக்கும் இந்திய அணி வீரர்களை இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடி சந்திக்க இருக்கின்றார். இதைத்தொடர்ந்து இன்று மாலை மும்பை வான்கடா மைதானத்தில் இந்திய வீரர்கள் பேரணியாக உலக கோப்பையுடன் வலம் வருவார்கள் என்றும், ரசிகர்கள் படை சூழ திறந்தவெளி பஸ்ஸில் டி20 உலக கோப்பையுடன் பயணிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
-
Cricket2 days ago
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: சூர்யகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை – உண்மை இதுதான்!
-
india2 days ago
தமிழகத்தில் வெளிமாநில ஆம்னி பேருந்துகள்….? சுப்ரீம் கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!
-
latest news2 days ago
மாணவர்களின் கவனத்திற்கு…! நாளை முதல் ஜூலை 5-ம் தேதி வரை.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..
-
tech news2 days ago
ஓவராகும் ஓடிடி மோகம்… சப்ஸ்கிரிப்ஷனில் பெத்த தொகையை சேமிக்க சூப்பர் டிப்ஸ்…
-
Cricket21 hours ago
என்னையவா கலாய்ச்சீங்க… டி20ல் முதல் இந்திய வீரராக ஹர்திக் பாண்டியா செய்த சாதனை…
-
tech news2 days ago
ரூ. 1000 கோடி பட்ஜெட்.. சென்னையில் கேப்ஜெமினியின் புது ஆஃபீஸ்
-
tech news19 hours ago
பாரபட்சம் இருக்காது.. ஒரே பிராசஸருடன் வெளியாகும் ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள்.?
-
tech news16 hours ago
ஏர்டெல், ஜியோ விலையை உயர்த்த பிஎஸ்என்எல் மட்டும் அப்படி செய்யவில்லை..!