அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்த நிலையில் வரும் 15 ஆம் தேதி அதனை தொடங்கி வைக்கின்றார்.
அரசு பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல் தவிர்த்து வருவதை பார்த்த முதல்வர் மு க ஸ்டாலின் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி காலை உணவு திட்டத்தை கொண்டு வருவதாக தெரிவித்திருந்தார். அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற பெயரில் முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக அரசு தொடக்கப் பள்ளிகளில் அதாவது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 1545 பள்ளிகளில் படிக்கும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ மாணவியர்களுக்கு பயன்பெறும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 33 கோடியே 56 லட்சம் செலவில் இந்த திட்டம் முதல் கட்டமாக தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
காலை உணவு திட்டத்தை தொடங்கிய பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவர்களின் வருகை அதிகரித்து இருப்பதாகவும், அவர்களின் ஊட்டச்சத்து மற்றும் கற்றல் திறனும் மேம்பட்டு இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்திருந்தன. இதனை பார்த்த அண்டை மாநிலங்களான தெலுங்கானா, கனடா, இலங்கை ஆகிய நாடுகளிலும் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
பின்னர் 2023 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள 30 ஆயிரத்து 992 அரசு பள்ளிகளில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்த திட்டத்தை தொடங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
2 லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் 600 கோடியில் இந்த திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் வரும் காமராஜர் பிறந்த நாளான 15 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் 8.30 மணிக்கு இந்த திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சங்கர் மற்றும் அரசு அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…