Categories: Cricketlatest news

டோனி விளையாட நினைக்கும் வரை ரூல்ஸ் மாறிட்டே இருக்கும்.. முகமது கைஃப்

ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடருக்கான விதிகள் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும், ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற அறிவிப்பும் வெளியானது. இந்த அறிவிப்பின் படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ். டோனி அடுத்த சீசனிலும் நிச்சயம் விளையாடுவார் என்பதை உணர்த்தும் வகையில் தான் உள்ளது.

அந்த வரிசையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் விதிமுறைகள் எம்.எஸ். டோனி கிரிக்கெட் விளையாட விரும்பும் வரை தொடர்ந்து மாற்றப்படும் என்று தெரிவித்தார்.

சமீபத்திய ஐ.பி.எல். விதிகளின் படி ஒவ்வொரு அணியும் அதிபட்சம் ஆறு வீரர்களை தங்களது அணியில் தக்கவைத்துக் கொள்ள முடியும். இதில் ஐந்து வீரர்களை தக்கவைத்துக் கொள்ளவும், ஒரு வீரருக்கு ஆர்.டி.எம். கார்டு முறையில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் விளையாடாமல் இருக்கும் வீரர்களை அன்கேப்டு வீரர்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஐ.பி.எல். தொடரில் வீரர்களை தக்க வைப்பது தொடர்பாக பேசிய முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப், “நீங்கள் டோனியை மீண்டும் பார்ப்பதற்கான வாய்ப்பை பெறுவீர்கள். அவர் ஃபிட்டாக இருக்கிறார், அவரது பேட்டிங் ஸ்டிரைக் ரேட் 200 ஆக உள்ளது, இதனாலேயே அவர் விளையாட விரும்பும் வரை விதிகள் மாறிக் கொண்டே இருக்கும் என்று நான் நம்புகிறேன்.”

“அவர் ஐ.பி.எல். தொடரில் விளையாட வேண்டும் என்று நினைத்தால், அவர் விளையாடுவார். அவர் அந்த அளவுக்கு பெரிய வீரர், பெரிய வெற்றியாளர், அவர் சி.எஸ்.கே. அணியில் தலைவராக இருந்து வந்துள்ளார். இந்த விதிமுறை சரியாகவே மாற்றப்பட்டு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.”

“அவர் ஃபிட்டாக இருப்பதோடு, நன்றாக விளையாடுகிறார் என்றே நான் நம்புகிறேன், ஏன் விதியை மாற்றி அவரை விளையாட வைக்கக் கூடாது. விதிமுறை டோனிக்காகவே மாற்றப்பட்டுள்ளது என்று எல்லோருக்கும் நிச்சயம் தெரியும். ஏன் டோனி போன்ற ஒரு வீரருக்காக விதியை மாற்றக் கூடாது?,” என்று தெரிவித்தார்.

Web Desk

Recent Posts

சேட்டன் வந்தல்லே!…டிஸ்சார்ஜ் ஆகி வந்தல்லே!…வீடு திரும்பிய வேட்டையன்…

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக் கோளாறு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகீட்சை முடிந்து அவர் நலமமுடன் வீடு…

34 mins ago

ஓட்டுநர் உரிமத்தில் மாற்றங்கள்.. ஆன்லைனிலேயே செய்யலாம்..

நாடு முழுக்க இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் அவசியமான ஆவணமாக இருந்து வருகிறது.…

48 mins ago

உங்களுக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுகிறதா? அப்போ இந்த தகவலை

இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது மாத சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத் தொகையை டிடிஎஸ்-ஆக வருமான வரித்துறையில் செலுத்தும் விதிமுறை அமலில்…

1 hour ago

மொத்தமா திருடிட்டாங்க.. இன்ஸடாவில் புலம்பி தள்ளிய ஆன்ட்ரே ரஸல்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் ஆன்ட்ரே ரசல். இவர் தற்போது கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 'டிரின்பாகோ…

2 hours ago

மகளிர் டி20 உலகக் கோப்பை.. 10 ஆண்டுகளில் முதல் வெற்றி.. சம்பவம் செய்த வங்கதேசம்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஷார்ஜாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் வங்கதேசம்…

4 hours ago

ஹர்பஜன் சொன்னது பொய்.. உண்மையை உடைத்த CSK பிசியோ

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிசியோதெரபிஸ்ட் வெளுத்து வாங்கியுள்ளார். முன்னதாக எம்.எஸ்.…

5 hours ago