இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மனைவி சாக்ஷியுடன் 15 வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் கேப்டனாக பல சாதனைகளை படைத்தவர் மகேந்திர சிங் தோனி. ஐசிசி யின் மூன்று கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றிருக்கும் இவர் பின்னர் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக வலம் வந்த இவர் ஐந்து முறை ஐபிஎல் தொடரை வென்றிருக்கிறார்.
கடந்த 2024 ஐபிஎல் போட்டியில் தனது கேப்டன்சியை சக வீரரான ருத்ராட்சிடம் ஒப்படைத்தார். இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. அதைத் தொடர்ந்து தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வரும் தோனி சினிமா புரொடக்ஷன் ஒன்றை தொடங்கியிருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் விளம்பர படங்களிலும் நடித்து வருகின்றார்.
எம் எஸ் தோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி சாக்ஷியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஸிவா என்கின்ற ஒரு மகள் இருக்கின்றார். இன்று தங்களது 15 வது திருமண நாளை இருவரும் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றார்கள். இது தொடர்பான புகைப்படத்தை தோனியின் மனைவி சாக்ஷி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். அதில் 15 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறோம் என்று பதிவிட்டிருக்கின்றார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…