முகேஷ் அம்பானி தனது மகன் திருமணத்திற்காக மூன்று ஜெட் விமானங்களை வாடகைக்கு எடுத்து இருக்கின்றார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி-யின் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய முக்கிய பணக்காரர்களில் இவரும் ஒருவர். இவர் நீதா அம்பானியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் மூத்த மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில் கடைசி மகனான ஆனந்த் அம்பானிக்கும், அவரது காதலியான வைர வியாபாரி மகள் ராதிகா மெர்சண்ட்க்கும் திருமணம் முடிவாகி இருக்கின்றது.
இவர்களது திருமணம் ஜூலை 12ஆம் தேதி அதாவது நாளை மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான அம்பானி வீட்டு திருமணம் என்பதால் உலகில் பல நாடுகளை சேர்ந்த அரசியல் பிரபலங்கள். சினிமா பிரபலங்கள் இந்த திருமணத்தில் பங்கேற்க இருக்கின்றார்கள்.
இதனால் இந்த திருமணத்திற்கு வருகை தரும் விருந்தினர்களை அழைத்து வருவதற்கு மூன்று பால்கன் ஜெட் விமானத்தை முகேஷ் அம்பானி வாடகைக்கு எடுத்து இருக்கின்றார். மேலும் இந்த திருமண விழாவிற்காக 100-க்கும் மேற்பட்ட தனியார் விமானங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் தோனி, ஸ்ரேயாஷ் ஐயர், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தரவு தாக்ரேவியின் மனைவி ரஷ்மி தாக்ரே உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வருகிறாது சாம்சங் இந்தியா பிரைவேட் லிமிடட் நிறுவனம். இங்கு சாம்சங் நிறுவன தயாரிப்புகள் உற்பத்தி…
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இரானி கோப்பை இறுதிப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் மும்பை அணியும், ரெஸ்ட் ஆஃப் இந்திய…
இந்தியாவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் கொண்ட போட்டி தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது…
நடிகர் விஜய் தனது அறுபத்தி ஒன்பதாவது படத்தின்றகான அறிவிப்பை வெளியிட்டு , பட ஷூட்டிங்கிற்கான பூஜைகள் நேற்று சென்னையில் சிறப்பாக…
தினசரி கோவில்களுக்கு செல்லும் பழக்கம் பலரிடம் இருந்து வந்தாலும், முக்கிய நாட்கள், பண்டிகை தினங்கள் அன்று இறை வழிபாட்டிற்கு முக்கியத்துவதும்…
தமிழகத்தில் வட-கிழக்கு பருவ மழை விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக…