இதை செய்ய மும்பை அணிக்கு இருபத்தி ஏழு ஆண்டுகளா?…திருப்புமுனை தந்த தொடர்…

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இரானி கோப்பை இறுதிப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் மும்பை அணியும், ரெஸ்ட் ஆஃப் இந்திய அணியும் மோதியது. மும்பை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன சர்பாரஸ் கான் அதிரடியாக ஆடி இரட்டை சதமடித்தார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரஹானே தொன்னூற்றி ஏழு ரன்களை எடுத்திருந்தார். அதிரடியாக ஆடிய சர்பாரஸ் கான் இருனூற்றி இருபத்தி இரண்டு ரன்கள் ஆட்டமிழக்காமல் இருந்தார் முதல் இன்னிங்ஸில்.

ரெஸ்ட் ஆஃப் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். யாஷ் தயாள், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். தனது முதல் இன்னிங்ஸின் பேட்டிங்கை துவங்கிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி நானூற்றி பதினாறு ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அந்த அணியின் வீரர் அபிமன்யு ஈஸ்வர் அதிராடியாக ஆடி நூற்றி தொன்னூற்றி ஓரு ரன்களை குவித்தார். ஒன்பது ரன் களில் தனது இரட்டை சத வாய்ப்பினை தவற விட்டார். துரூவ் ஜுரேல் தொன்னூற்றி மூன்று ரன்களை எடுத்திருந்தார்.

Mumbai Team

மும்பை தரப்பில் ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோடியன் ஆகியோர் மூன்று விக்கெட்டுகளை எடுத்திருந்தனர். ஐந்தாவது மற்றும் கடைசி நாளில் மும்பை அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து முன்னூற்றி இருபத்தி ஒன்பது ரன்களை எடுத்தது.

போட்டி டிராவானது இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் அதிக ரன் களை எடுத்த மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இருபத்தி ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மும்பை அணி இரானி கோப்பையை வென்றுள்ளது. இந்த இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரட்டை சதமடித்த சர்பாரஸ் கான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

sankar sundar

Recent Posts

பேச்சு வார்த்தை மூலம் தீர்வு?…சாம்சங் போராட்டம் குறித்து அமைச்சர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை…

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வருகிறாது சாம்சங் இந்தியா பிரைவேட் லிமிடட் நிறுவனம். இங்கு சாம்சங் நிறுவன தயாரிப்புகள் உற்பத்தி…

43 mins ago

வாகை சூடப்போகிறதா?…வாங்கிக் கட்டப்போகுதா?வங்கதேசம்…ஆறாம் தேதி துவங்க உள்ளது அதிரடி…

இந்தியாவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் கொண்ட போட்டி தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது…

2 hours ago

பாஜக தமிழிசைக்கு சவால்…தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கியுள்ள நடிகர்…

நடிகர் விஜய் தனது அறுபத்தி ஒன்பதாவது படத்தின்றகான அறிவிப்பை வெளியிட்டு , பட ஷூட்டிங்கிற்கான பூஜைகள் நேற்று சென்னையில் சிறப்பாக…

3 hours ago

புரட்டாசி சனிக்கிழமை…பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்…

தினசரி கோவில்களுக்கு செல்லும் பழக்கம் பலரிடம் இருந்து வந்தாலும், முக்கிய நாட்கள், பண்டிகை தினங்கள் அன்று இறை வழிபாட்டிற்கு முக்கியத்துவதும்…

4 hours ago

இந்த நாலு மாவட்டத்துக்கு கன மழை…வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள எச்சரிக்கை…

தமிழகத்தில் வட-கிழக்கு பருவ மழை விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக…

5 hours ago

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

9 hours ago