Categories: latest newstamilnadu

my v3 ads: நீதிமன்றத்தில் சரணடைந்த சக்தி ஆனந்தன் – என்ன காரணம்?

ஆன்லைனில் விளம்பரம் பார்த்தால் வருமானம் என்று கூறி மக்களிடம் மோசடி செய்த புகாரில் my v3 ads நிறுவனம் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்தப் புகாரில் my v3 ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், கோவையில் அனுமதியின்றி மக்கள் கூட்டத்தைக் கூட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவானது.

மேலும், முறையற்ற பணபரிவர்த்தனை, சிட் பண்ட் மோசடிப் பிரிவு ஆகிய பிரிவுகளின் கீழும் சக்தி ஆனந்தன் உள்ளிட்ட my v3 ads நிர்வாகிகள் மீதும் வழக்குப் பதியப்பட்டது. கோவை குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்குகள், சென்னை பொருளாதார குற்றங்களுக்கான சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் சக்தி ஆனந்தன் கைது செய்யப்படலாம் என்கிற நிலையில், முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு, சென்னை பொருளாதார சிறப்புக் குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் அவரை சரணடையுமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்தநிலையில், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் முன்னிலையில் சக்தி ஆனந்தன் இன்று சரணடைந்தார். இந்த வழக்கில் அவரை வரும் 19-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். வரும்காலங்களில் தனது நிறுவனத்தின் செயல்பாடுகளில் எந்தவொரு சிக்கலும் ஏற்படக் கூடாது என்பதாலேயே நீதிமன்றத்தில் சரணடைந்ததாகவும், இதனால் பொதுமக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்றும் சக்தி ஆனந்தன் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

AKHILAN

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

45 mins ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

1 hour ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

3 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

4 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

5 hours ago