நந்தனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிப்பதற்கு இனி மாணவிகளுக்கும் அனுமதி உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மிகப் பழமையான கலை மற்றும் அறிவியல் கல்லூரி நந்தனம் அரசு கல்லூரி 1969 ஆம் ஆண்டு மாணவர்களுக்காக தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அண்ணாசாலையில் 1901ஆம் ஆண்டு மதராஸ் என்ற பள்ளி தொடங்கப்பட்ட நிலையில், 1918 ஆம் ஆண்டு காயிதே மில்லத் என்ற கல்லூரியும் தொடங்கப்பட்டது. பின்னர் 1969 இல் ஆற்காடு நவாப் பெண்களுக்கு தனியாக மகளிர் கல்லூரியை தொடங்கினார்.
அதற்கு பதிலாக நந்தனத்தில் ஆண்களுக்கு என்று தனியாக கல்லூரி தொடங்கப்பட்டது. இந்த கல்லூரியில் படித்தவர்கள் பலர் தற்போது முக்கிய தலைவர்களாக இருக்கிறார்கள். இப்படி பல பெருமையும் மிகுந்த இந்த கல்லூரியில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து வருகிறார்கள். போராட்டம் நடத்துவது, மோதல், பஸ் கூரை மீது ஆட்டம் போடுவது என்ற சம்பவங்கள் நடைபெற்றன.
இதனை கல்லூரி நிர்வாகமும் போலீசாரும் இணைந்து கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். இந்நிலையில் இந்த கல்லூரியில் மாணவிகளை சேர்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் 200 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். இதில் 130-து பேருக்கு கல்லூரியில் சேர்வதற்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடப் பிரிவுகளிலும் மாணவிகள் ஆர்வத்துடன் சேர்ந்து வருகிறார்கள்.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…