Categories: latest news

தன்மானம் இல்லையா?!.. பாஜக-விலிருந்து விலகுங்கள்!.. தமிழிசைக்கு எழும் ஆதரவு!..

தமிழகத்தில் முன்பெல்லாம் காங்கிரஸில்தான் கோஷ்டி பூசல் இருந்தது. இப்போது பாஜகவிலும் இது அதிகரித்துவிட்டது. தற்போதுள்ள தமிழக பாஜகவில் அண்ணாமலை டீம், அண்ணாமலை இல்லாதவர்கள் டீம் என இரண்டு அணி இருக்கிறது. அண்ணாமலையின் செயல்பாடுகளை தமிழிசை சவுந்தர்ராஜன் போன்ற பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

தமிழிசை சவுந்தர்ராஜன் ஏற்கனவே தமிழக பாஜக தலைவராக இருந்தவர். தமிழத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என ஓயாமல் சொல்லி வந்தவர். ஆனால், அவரை அந்த பதவியிலிருந்து பாஜக தூக்கியது. அதன்பின் அவரை தெலுங்கானா மற்றும் புதுச்சேரிக்கு ஆளுனராக நியமித்தது.

சில வருடங்கள் ஆளுனராக பணிபுரிந்த தமிழிசை அந்த பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். ஏனெனில் அவருக்கு தமிழக அரசியலில்தான் ஆர்வம் அதிகம். பாராளுமன்ற தேர்தலின் முடிவில் பாஜக தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த தமிழிசை சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது ‘அண்ணாமலையின் செயல்பாட்டில்தான் பாஜக தோல்வியை சந்தித்திருக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம்’ என சொன்னார்.

இதனால் கோபமடைந்த அண்ணாமலையின் விசுவாசிகள் டிவிட்டர் வார் ரூமில் தமிழிசையை கடுமையாக விமர்சித்தனர். இதனால், கோபமடைந்த தமிழிசை ‘என்னை அசிங்கமாக பேசினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்’ என பொங்கினார். இந்நிலையில்தான், இன்று, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்ற விழாவில் தமிழிசை கலந்து கொண்டார்.

இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த மேடையில் தமிழிசையிடம் அமித்ஷா மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். அண்ணாமலைக்கு எதிராக தமிழிசை பேசியதையே அவர் கண்டித்ததாக கருதப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இதைத்தொடர்ந்து ‘ஒரு பெண்ணிடம் வீரத்தை காட்டுவதுதான் பாஜகவின் வேலை. பாஜகவிலிருந்து தமிழிசை சவுந்தர்ராஜன் விலக வேண்டும்’ என சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். அதோடு, அமித்ஷா நடந்து கொண்ட விதத்தை பலரும் திட்டி வருகிறார்கள்.

 

Murugan M

Recent Posts

ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பர் லின்க் செய்வது இவ்வளவு ஈசியா?

தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி,…

3 hours ago

நாலு நாளைக்கு நச்சு எடுக்கப் போகுதா மழை?…அப்போ அலர்டா இருக்கனுமா?…

தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது…

3 hours ago

பி.எஃப் பணத்தை எடுக்கப் போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..

வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) தனிப்பட்ட காரணங்களுக்கு எடுத்துக் கொள்வோருக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் பி.எஃப்.…

3 hours ago

தற்கால வீரர்களில் இவர் மட்டும் தான்.. மிரட்டி விட்ட விராட்..!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட்…

4 hours ago

குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் கொடியேற்றம்..பன்னிரெண்டாம் தேதி சூரசம்ஹாரம்…

நவராத்தி நாட்களில் மாலை அணிவித்து அம்மனுக்கு விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருபவர்கள் பலரும் உண்டு. வீடுகளில் கொலு வைத்து…

4 hours ago

இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை – ICC

இலங்கை அணி கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒரு ஆண்டு விளையாடுவதற்கு தடை விதித்த சம்பவம் பரபரப்பை…

4 hours ago