சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல சீசன்களாக மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்தார். இருந்தும் அவர் எந்த சீசன் வேண்டும் என்றாலும் ஓய்வெடுக்கலாம் என்ற நிலையில் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது.
இதை தொடர்ந்து கடந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருந்தும் கடந்த சீசன் அவருக்கு பெரிய அளவு கைக்கொடுக்கவில்லை. ப்ளே ஆப் கூட செல்லாமல் சென்னை அணி தகுதி சுற்றிலே வெளியேறியது.
இதை தொடர்ந்து இந்த சீசனில் மெகா ஏலம் நடக்க இருக்கும் நிலையில் எல்லா டீம்களிலும் பல மாற்றங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சென்னை அணியில் ரிஷப் பந்தினை எடுக்கலாம் எனவும் பேச்சுகள் எழுந்துள்ளது. அதை தொடர்ந்து ரிஷப் பந்தை சென்னை டீமின் கேப்டனாகவாக மாற்றலாம் எனவும் கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து சென்னை நிர்வாகம் தரப்பில் இருந்து கூறும்போது, ருதுராஜ் கெய்க்வாட் திடீரென கேப்டனாக மாறவில்லை. கடந்த 2 சீசன்களாகவே ருதுராஜை கேப்டனாக்கும் முடிவு இருந்ததாகவும், அதற்கான பயிற்சி எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால் ருதுராஜை கேப்டன் பதவியில் இருந்து இறக்க வாய்ப்பே இல்லை.
தோனி வெளியேறும் பட்சத்தில் சரியான தலைமை சென்னை அணிக்கு வேண்டும் என்பதால் அந்த அணியில் பயிற்சி எடுத்த வீரராக மட்டுமே இருப்பார். இருந்தும் ரிஷப்பை டெல்லி நிர்வாகம் தக்க வைக்காமல் ஏலத்தில் விட்டாலும் அவரை எடுக்க கடும் போட்டி இருக்கும். அத்தனை போராடியும் சென்னை அணி ரிஷப் பந்தை அணியில் எடுத்தாலும் அவர் வீரராகவே இருப்பார் எனக் கூறப்படுகிறது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…