Categories: latest newstamilnadu

செங்கல்பட்டில் பள்ளிக் குழந்தைகள் கடத்தலா… உண்மையில் என்ன நடந்தது?

செங்கல்பட்டில் பள்ளிக் குழந்தைகள் கடத்தப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என்று விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

செங்கல்பட்டு ஓமலூர் பகுதியைச் சேர்ந்த வேலன் – ஆர்த்தி தம்பதிக்கு 11 வயதான ரட்சிதா மற்றும் 7 வயதான நிதின் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் ஓமலூர் ஆதி திராவிடர் நடுநிலைப் பள்ளியில் படித்து வருகிறார்கள். கடந்த ஓராண்டுக்கு முன்பு வேலன் – ஆர்த்தி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.

வேலன் குழந்தைகளுடன் ஓமலூரிலும் ஆர்த்தி, அவரின் தாய் வீட்டிலும் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில், நேற்று வழக்கம்போல் பள்ளி முடிந்து பள்ளியை விட்டு வெளியில் வந்த ரட்சிதா, நிதினை ஒரு பெண் மற்றும் ஆண் ஆகியோர் காரில் கூட்டிச் சென்றிருக்கிறார்கள். இதைப் பார்த்த பள்ளி நிர்வாகத்தினர் குழந்தைகளை யாரோ காரில் கடத்திச் செல்வதாக எண்ணியிருக்கிறார்கள்.

இதுகுறித்து உடனடியாக வேலனுக்கும் போலீஸுக்கும் அவர்கள் தகவல் கொடுத்திருக்கிறார்கள். போலீஸார் விசாரணையில் குழந்தைகள் இருவரும் கடத்தப்படவில்லை என்ற உண்மை தெரியவந்திருக்கிறது. குழந்தைகளின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸார், குழந்தைகளைத் தனது நண்பர் மூலம் அழைத்துச் சென்றது குழந்தைகளின் தாய் ஆர்த்திதான் என்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து குழந்தைகளை மீட்டு தந்தை வேலனிடம் போலீஸார் ஒப்படைத்திருக்கிறார்கள்.

AKHILAN

Recent Posts

ரூ. 500-க்கு கிடைக்கும் கியாஸ் சிலிண்டர் பற்றி தெரியுமா?

இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…

4 hours ago

இந்திய புழக்கத்தில் ரூ. 10,000 நோட்டு.. இந்த விஷயம் தெரியுமா?

இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…

4 hours ago

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

7 hours ago

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

8 hours ago

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

8 hours ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

9 hours ago