சமீபத்தில் இந்தியாவில் வைத்து நடந்து முடிந்த ஐம்பது ஓவர் உலக்கோப்பை போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்து மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்திய தற்போதைய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான விராட் கோலி, ரோஹித் சர்மாவிற்கு இந்திய அணியில் இடமிருக்காது என செய்திகள் வலம் வந்தது. இதை எல்லாம் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜெய்ஷா மறுத்தார். கோலி, ரோஹித் சர்மா இருவரும் இருபது ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்பார்கள் என சொல்லியிருந்தார்.
அவர் சொன்னது போலேவே இந்திய இருபது ஓவர் உலகக் கோப்பை அணிக்கு ரோஹித் சர்மா தலைமை வகித்தார். இந்திய அணி அதிரடியாக விளையாடி இறுதிப்போட்டியில் பலமிக்க தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த தொடருக்கு பின்னர் ரோஹித் சர்மா,விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச் இருபது ஓவர் போட்டிகளிலிருந்து தங்களது ஓய்வினை அறிவித்தனர். தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவடைந்ததால், தலைமை பயிற்சியாளாராக முன்னாள் துவக்க வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் இம்மாத இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த ஒரு நாள் போட்டி தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இவர்கள் மூன்று பேரும் அணியில் இடம்பெற வேண்டும் கம்பீர் விரும்பினார்.
இப்போது ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிரான ஒரு நாள தொடரில் விளையாட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் ஹிட்-மேன் ரோஹித் சர்மாவின் அதிரடியை இலங்கையில் இந்திய ரசிகர்கள் பார்த்து மகிழலாம்.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…