வரும் 21ஆம் தேதி கைலாச நாடு எங்கு இருக்கின்றது என்பது குறித்து அறிவிக்கப்போவதாக நித்தியானந்தா தெரிவித்திருக்கின்றார்.
சர்ச்சை சாமியார் என்று அழைக்கப்பட்டு வரும் நித்தியானந்தா கைலாய நாடு என்று தனக்கென ஒரு நாட்டை உருவாக்கி அதற்கு தனி பாஸ்போர்ட், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றை அறிவித்தார். அந்த நாடு பற்றிய பரபரப்பு தற்போது வரை ஓய்ந்தபாடில்லை. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாட்டுக்குச் சென்ற நித்தியானந்தா இந்துக்களுக்காக கைலாச என்ற ஒரு நாட்டை உருவாக்கியுள்ளதாக தெரிவித்திருந்தார்.
மேலும் அந்த நாட்டுக்கு என்று தனி பாஸ்போர்ட் இருக்கின்றது, ரூபாய் நோட்டுகள் இருக்கின்றன என்று தெரிவித்திருந்தார். கைலாச நாடு சார்பில் பல நாடுகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறி இது தொடர்பான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் அவரின் சிஷ்யர்கள் பதிவிட்டு இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் கைலாச நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்கள்.
இப்படி இருக்கும் சூழலில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் கைலாசாவை சேர்ந்த பெண் பிரதிநிதிகள் பங்கேற்று பேசியதும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கைலாச சார்பில் பெண் பிரதிநிதிகள் பேசப்பட்டது விரைவில் நீக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை சார்பில் அறிவிக்கப்பட்டது. இல்லாத ஒரு நாட்டின் பெயரில் நித்தியானந்தாவும் அவரது சிஸ்டியர்களும் ஒரு பிம்பத்தை உருவாக்கி பலரையும் ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் வருகிற 21ஆம் தேதி கைலாச நாடு எங்கு இருக்கின்றது என்பது குறித்து நித்தியானந்தா அறிவிக்க போவதாக கூறியிருக்கின்றார். இது தொடர்பாக அவரது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் கைலாச நாடு திறக்கப்பட்டுள்ளது. வருகிற 21ஆம் தேதி குரு பூர்ணிமா நன்னாளில் கைலாசாயிருக்கும் இடத்தை அறிவிக்க போகிறோம்.
எங்கள் நாட்டிற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம் என்று கூறி இருக்கின்றார். மேலும் கைலாசம் வாசியாக இப்போது பதிவு செய்யுங்கள் என்று ஒரு ஆன்லைன் லிங்கும் குறிப்பிடப்பட்டுள்ளது .அதன்படி வருகிற 21ஆம் தேதி நித்யானந்தா கூறிவரும் கைலாசநாடு எங்கு இருக்கின்றது என்பது தெரிந்துவிடும். உண்மையாக கைலாசா என்ற நாடு இருக்கின்றதா இல்லை மக்களை ஏமாற்ற இவர்களை கதை கட்டி வருகிறார்களா? என்பது தெரிந்துவிடும்
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…