தமிழக நியாயவிலை கடைகளில் இரண்டு மாதங்களாக பாமாயில், துவரம் பருப்பு கொடுக்கப்படாத நிலையில் இந்த மாதமும் வழங்கப்படாமல் இருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தின் நியாயவிலை கடைகளில் ரேஷன் கார்டுக்கள் மண்ணெண்ணெய், பாமாயில், அரிசி, சக்கரை, துவரம் பருப்பு கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாகவே இதில் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. முதலில் மண்ணெண்ணெய் சரியாக கொடுக்கப்படாமல் இருந்தது. அடுத்து இரண்டு மாதங்களாக பருப்பு மற்றும் பாமாயில் விநியோகமும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளால் டெண்டர் பிரச்னை நிலவி வருகிறது. இதை எதிர்கட்சிகளும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறது. கொள்முதல் இறுதி செய்யப்பட்டு விட்டது. மே மாதத்திற்கான பருப்பை பெற்றுக்கொள்ளாத குடும்பத்தினர் ஜூன் மாதம் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.
ஆனால் ஜூன் மாதம் முடிந்து ஜூலையும் பிறந்துவிட்ட நிலையில் இந்த மாதமும் பாமாயில் மற்றும் பருப்பு விநியோகம் தொடர்ந்து தடை பெற்றுள்ளது. வட மாவட்டங்களில் மட்டுமல்லாது தமிழகத்தின் தலைநகரான சென்னை, காஞ்சிபுரத்திலே இதே பிரச்னை உருவாகி இருக்கிறது.
பல நியாய விலை கடைகளில் அரிசி மற்றும் சர்க்கரை மட்டுமே வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ரேஷன் பருப்பையே நம்பி வாழ்ந்த மக்கள் மூன்று மாதமாக கடை பருப்பை வாங்க வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. இன்னும் சில தினங்களில் பருப்பு மற்றும் பாமாயில் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…