தமிழகத்தில் மதுவை ஆன்லைன் ஆப் மூலம் டெலிவரி செய்யும் திட்டம் பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல் பரவிய நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறது.
தமிழகத்தில் ஒரு பக்கம் மதுவிலக்கு கோரிக்கை தொடர்ந்து மக்களிடம் எழுந்து வருகிறது. இருந்தும் ஒரு பக்கம் டாஸ்மாக்கில் மது விற்பனை நாளுக்கு நாள் கோடி கணக்கில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் டாஸ்மாக்கில் இருந்து மதுவை டோர் டெலிவரி செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டது.
ஏற்கனவே, மகாராஷ்டிரா, சட்டிஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இத்திட்டம் செயல்முறையில் இருக்கும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
மது மற்றும் புகையிலை நுகர்வோர்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடாது என்பதே சுகாதாரத் துறையின் விதியாக இருக்கிறது. ஆனால் அதை சோமேட்டோ, ஸ்விக்கி மூலம் டெலிவரி செய்யும் தமிழக அரசின் திட்டத்திற்கு தற்போது எதிர்ப்பு குரல் எழுந்து வரும் நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு செய்தியை வெளியிட்டு இருக்கிறது.
அதில், ஒயின், பீர் உள்ளிட்ட மதுபானங்களை மூலம் சோமேட்டோ, ஸ்விக்கி மூலம் டெலிவரி செய்யும் திட்டம் இல்லை. அதுமட்டுமல்லாமல் 90மில்லி மதுபானத்தை விற்பனை செய்யவும் டாஸ்மாக் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் கூறப்பட்டிருக்கிறது. இணையத்தில் உலா வரும் செய்தி வதந்தி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…