திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதம் தரிசனம் செய்ய டிக்கெட் வெளியிடும் தேதிகளை தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து இருக்கின்றது.
உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். எப்போதும் இங்கு ஏழுமலையானை பார்க்க மக்களின் கூட்டம் நிரம்பி வழியும். அதிலும் அக்டோபர் மாதங்களில் சொல்லவே வேண்டாம். இந்நிலையில் அக்டோபர் மாத தரிசனம் செய்வதற்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியில் தேதிகளை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருக்கின்றது.
அதன்படி வருகிற ஜூலை 18ஆம் தேதி காலை 10 மணி முதல் 20ஆம் தேதி காலை 10 மணி வரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். அன்று மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். மேலும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் உற்சவம், பிரம்மோற்சவம், சக்ரதீப அலங்கார சேவைகளுக்கான டிக்கெடுகள் ஜூலை 22ஆம் தேதி காலை 10 மணி அளவில் ஆன்லைனில் வெளியிடப்படும்.
அக்டோபர் மாதம் அங்கப்பிரதோஷணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் ஜூலை 23ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூபாய் 10 ஆயிரம் நன்கொடை செலுத்தி பெறப்படும். விஐபி தரிசன டிக்கெட் 23ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…