india
உபி மத நிகழ்வு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் பலி… 2 லட்சம் நிவாரணம் அறிவித்த அரசு…
![up1 - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/up1.jpg)
உத்திர பிரதேச ஹத்ராஸ் மத கூட்டத்தில் சிக்கிய உயிரிழந்தோரின் எண்ணிக்கை 122ஐ கடந்து இருக்கிறது. பலர் தொடர் சிகிச்சையில் இருப்பது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தனியார் நிகழ்ச்சி உத்திர பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் என்ற இடத்தில் மத நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கானோர் சிக்கி ஒருவர் ஒருவர் மீது ஏறி சென்றனர்.
இடிப்பாடுகளில் சிக்கி பலர் இறந்த நிலையில், பாதிக்கப்பட்ட பலர் பஸ்கள் மற்றும் வேன்களில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஹத்ராஸ் மருத்துவமனைக்கு 60 பேரின் உடல்கள் முதலில் வரப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக உடல்கள் வந்துக்கொண்டு இருக்கிறது என மாவட்ட நீதிபதி ஆசிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல். எடாஹ் மாவட்ட மருத்துவமனைக்கும் 27 பேரின் உடல்கள் வந்துள்ளதாக டாக்டர் உமேஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உத்திர பிரதேச முதல்வர் யோகி அதித்யநாத் எக்ஸ் தளத்தில் கூறுகையில், கூட்ட நெருக்கடியில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காயம் அடைந்தவர்கள் தேவையான சிகிச்சை கொடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வரை 122 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் 100க்கும் அதிகமான உடல்கள் வந்துள்ளதால் அரசு மருத்துவமனை திணறி வருகிறது. ஆக்ஸிஜன் இல்லை எனவும், மருத்துவர்கள் சரியாக இல்லை எனவும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு 2லட்சம் நிவாரணம் கொடுக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
india
2024-25 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்… தேதியை அறிவித்த மத்திய அரசு…!
2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற ஜூலை 23ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கின்றார். வரும் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்துல நடைபெற இருக்கின்றது.
ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது முழு ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் 3-வது முறையாக பிரதமரான பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
india
மனிதர்களுக்கு வரப்போகும் பேராபத்து… பூமியை தாக்க வரும் ராட்சச விண்கல்… எச்சரிக்கும் இஸ்ரோ தலைவர்…!
ராட்சச அளவிலான விண்கல் ஒன்று வருகிற 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி பூமியை தாக்கும் என கூறப்படுகின்றது.
விண்கல் பூமியை தாக்கும் அபாயம் குறித்து ஆராய்ச்சி இடங்கள் தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்து வருகிறார்கள். சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்ந்து வருவதாகவும் இன்னும் 16 வருடங்களில் சரியாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி அந்த விண்கல் பூமியை தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தனர்.
இதிலிருந்து தற்காத்துக் கொள்ள போதுமான பாதுகாப்பு இன்னும் நாம் ஏற்படுத்தவில்லை என்று கூறுகிறது. இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்து இருக்கின்றார் அதில் அவர் கூறியிருந்ததாவது அபோபிஸ் என் ராட்சச அளவிலான விண்கல் ஒன்று வரும் 2029 ஏப்ரல் 13ஆம் தேதி பூமியை கடக்கும் என கண்காணிக்கப்படுகின்றது.
இந்த விண்கல் மீண்டும் 2036 ஆம் ஆண்டு பூமியை தாக்கலாம். 370 மீட்டர் விட்டம் கொண்ட இந்த விண்கல் பூமியை தாக்கும்போது மனித குலத்துக்கு அதிகம் ஆபத்து ஏற்படும். வரலாற்றில் இது போன்ற சம்பவங்கள் அதிக அளவு நடந்துள்ளது. எனவே இது ஏற்படாது என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது. பூமிக்கு எதுவும் ஆகக்கூடாது என்று தான் நாமும் விரும்புகிறோம். ஆனால் நடக்க உள்ளதை நம்மால் தடுக்க முடியாது. அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. அதை எதிர் கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.
india
திருமணமாகி இரண்டே வருடம்.. கணவன், மாமியார், நாத்தனார் என குடும்பமாக… ஐடி பெண் ஊழியர் எடுத்த விபரீத முடிவு..!
கூடுதல் வரதட்சணை கேட்டு குடும்பமே கொடுமை செய்த காரணத்தால் ஐடி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது.
விஜயநகர் மாவட்டம் சுசலஹல்லி பசப்புரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் பூஜா. இவர் படித்து முடித்துவிட்டு ஐடியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் சுனில் என்பவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்திற்கு பிறகு பெங்களூரில் கங்கமணக்குடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து அதில் வசித்து வந்தார்கள் .
திருமணத்தின் போது சுனில் பூஜா குடும்பத்திடம் ஏகப்பட்ட வரதட்சனை கேட்டிருந்தார். அது அனைத்தையும் அவர்கள் கொடுத்துதான் திருமணம் செய்திருந்தார்கள். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில் கடந்த சில மாதங்களாக சுனில் தனது மனைவி பூஜாவிடம் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தி வந்திருக்கின்றார். ஆனால் பூஜா வரதட்சணை கொடுக்க முடியாது என்று மறுத்து இருக்கின்றார்.
இதன் காரணமாக இந்த தம்பதிகளிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கணவர் மட்டும் இல்லாமல் தாய் மற்றும் சகோதரி என அனைவரும் குடும்பமாக சேர்ந்து அவரை கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கின்றார் பூஜா. இது குறித்து தனது பெற்றோரிடமும் பூஜா தெரிவித்திருக்கின்றார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூஜா தனது அறையில் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பூஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் பூஜாவின் குடும்பத்தினர் சுனில் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது.
india
என்ன கடிச்சா நான் சும்மா விட்ருவேனா… பாம்புக்கு ரிவெஞ் கொடுத்த நபர்… பீகாரை அதிர வைத்த சம்பவம்…!
பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னை கடித்த பாம்பை திருப்பி கடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பது பழமொழி. பாம்பை கண்டு பயப்படாதவர்கள் யாருமே கிடையாது. பாம்பு கடித்து மனிதர்கள் பலரும் உயிரிழப்பது வழக்கம் தான். பாம்பு கடித்தவர்கள் தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு செல்லும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்த்திருப்போம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக பீகாரில் ஒரு சம்பவம் ஒன்று நடந்திருக்கின்றது.
பீகாரின் நபாடா மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் லோகர் என்பவர் கூலித்தொழிலாக இருந்து வருகின்றார். இவர் வேலையை முடித்துவிட்டு ரயில் தண்டவாளம் அருகே இருந்த குடிசையில் படித்து கொண்டிருந்தார். அப்போது விஷ பாம்பு ஒன்று அவரை கடித்தது. இதை பார்த்த அவர் தன்னை கடித்த பாம்பை திரும்பி கடித்தால் தனது உடலில் இருக்கும் விஷம் ஒன்று செய்யாது என்ற மூடநம்பிக்கையில் இருந்துள்ளார்.
உடனே அந்த பாம்பை பிடித்து மூன்று முறை கடித்துள்ளார். இதில் அந்த விஷப்பாம்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டது. இதனையடுத்து சந்தோஷ் லோகர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் இருப்பவர்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
india
125 கோடி கூட இன்னும் ஒரு 11 கோடி… இந்திய கிரிக்கெட் அணிக்கு மற்றொரு பரிசுத்தொகை… மகாராஷ்டிரா அரசு அதிரடி..!
உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு மகாராஷ்டிரா அரசு 11 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்குவதாக தெரிவித்து இருக்கின்றது.
நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்கா அணியை இந்திய அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. இது இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதைத்தொடர்ந்து தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு பிரம்மாண்டமாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும் உலகக்கோப்பை வெற்றியை கொண்டாடுவதற்கு நேற்று இந்திய அணி வீரர்கள் மும்பையில் திறந்த பஸ்ஸில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். கிரிக்கெட் வீரர்களை காண மும்பையில் ஏகப்பட்ட ரசிகர்கள் படையெடுத்ததால் அந்தப் பகுதியே ஸ்தம்பித்து போனது. இந்திய வீரர்கள் திறந்த வெளி பஸ்ஸில் உலக கோப்பையுடன் பேரணியாக சென்ற புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலானது.
அதைத் தொடர்ந்து மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவில் 125 கோடி பரிசு தொகையும் வழங்கப்பட்டது. இந்த பரிசுத்தொகையினை bcci செயலாளர் ஜெய்ஷா வழங்கியிருந்தார். இந்நிலையில் உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட மும்பை வீரர்களுக்கு மகாராஷ்டிரா சட்டசபையில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது பேசிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு 11 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கின்றார்.
-
latest news1 day ago
தமிழகத்தில் வரும் 11ம் தேதி வரை… வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கிய தகவல்…!
-
tech news1 day ago
இனி அந்த விலை கிடையாது.. சத்தமின்றி Netflix செய்த காரியம்..?
-
World News1 day ago
2024 United Kingdom elections: இங்கிலாந்தின் அடுத்த பிரதமர்… யார் இந்த கீர் ஸ்டார்மர்?!
-
tech news2 days ago
வேற லெவல் லுக், சூப்பர் ஸ்பெக்ஸ் கொண்ட போட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்
-
tech news2 days ago
ரூ. 99,999 விலையில் மோட்டோ ப்ளிப் போன் அறிமுகம் – என்ன ஸ்பெஷல் தெரியுமா?
-
latest news20 hours ago
Budget 2024… தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?!
-
latest news19 hours ago
சென்னையில் அதிர்ச்சி.. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை!
-
Cricket2 days ago
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்… இந்திய வீரர்களுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்… வைரல் வீடியோ..!