கடலூர் மாவட்டம் கொடிக்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் நந்தினி. இவர் கணவர் சக்திவேல் மாலத்தீவில் தங்கி வேலை செய்து வருகிறார். இத்தம்பதிக்கு ஏற்கனவே 6 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு தர்ஷன் குமார் எனப் பெயர் வைத்தனர்.
கொடிக்குளம் கிராமத்தில் குழந்தைகளிடம் தனியாக வசித்து வருகிறார் நந்தினி. நேற்று காலை வீட்டின் முன்னர் தர்ஷனை படுக்க வைத்துவிட்டு நந்தினி பின்புறம் இருக்கும் தோட்டத்தில் வேலை செய்து வந்து இருக்கிறார். திடீரென தர்ஷனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து இருக்கிறார்.
குழந்தைக்கு பேச்சு மூச்சில்லாததை அடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தர்ஷனை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருக்கிறார். குழந்தையை நாய் கடித்ததாக நந்தினி கூற, மருத்துவர்களும் பரிசோதித்து விட்டு தர்ஷன் இறந்துவிட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, நந்தினி அலறி துடித்தவர் தர்ஷனை வீட்டுக்கு தூக்கி வந்து குளிப்பாட்டி உறவினர்களுக்கு இறப்பு செய்தியை கூறி இருக்கிறார். தொடர்ந்து, ஆவினங்குடி போலீசார் குழந்தையை மீட்டு உடற்கூராய்வுக்கு திட்டக்குடி மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கின்றனர்.
இதுகுறித்து, காவல்துறை தரப்பில் கூறும்போது நந்தினியின் தாய் குழந்தை தர்ஷனை நாய் கடித்ததாக கூறுகின்றார். ஆனால் குழந்தைக்கு கழுத்தில் இறுக்கிய தழும்பை தவிர வேறு காயங்கள் இல்லை. கடித்ததற்கான மார்க்குகளும் இல்லை என்பதால் இது கொலையாகவும் இருக்கலாம். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்த பின்னரே இதுகுறித்து மேலும் தகவல் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…
இந்திய - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்து வருகிறது. மழை குறுக்கீடு,…
தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. இதனையடுத்து ஆளுநர் முன்பு பதவி ஏற்பு விழாவும் நடந்து முடிந்தது. முன்னாள் அமைச்சர்…
தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்றிருந்தனர். அமலாக்கத்துறை வழக்கிலிருந்து ஜாமீனில் விடுதலையான செந்தில் பாலாஜி…
இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது வங்கதேச ஆடவர்…
மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS) மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) ஆகியவற்றின் கீழ்,…