ஊட்டியில் பெய்து வரும் அடைமழையால் அங்கிருக்கும் மக்கள் பெரிய அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் மழையுடன் கூடிய கடும்மழை கடந்த 10 நாட்களாக பெய்து வருகிறது. இதனால் ஊட்டி, குந்தா, கூடலூர், குன்னூர் பகுதிகளில் தொடர்ந்து மழையின் சீற்றம் இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்து இருக்கும் நிலையில் காற்று அதிகரித்து இருக்கிறது.
இதனால் பல பகுதிகளில் பல வகையான மரங்கள் அடியோடு விழுந்து இருக்கிறது. காற்றின் வேகத்தினை சமாளிக்க முடியாமல் மரங்கள் வாகனங்கள் மீது சரிந்து சேதமடைந்தது. மேலும் பல இடங்களில் மின் கம்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மரங்களை அகற்றும் பணியில் மீட்புப்பணியினர் கொட்டும் மழையிலும் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று ஒரு நாளில் மட்டுமே 50 மரங்கள் விழுந்து இருப்பதால் 100க்கும் அதிகமான மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரி சுற்று வட்டாரத்தில் மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் குடிநீர் விநியோகமும் தடை செய்யப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மரங்கள் விழுந்ததால் எந்தவித உயிர்சேதமும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…