எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார். அதோடு இரட்டை இலையை டெபாசிட் இழக்க செய்து தமிழக அரசியலில் அருவருக்கத்தக்க அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பிரிந்திருக்கக் கூடிய சக்திகள் அனைவரும் தொண்டர்கள் தான் என்றார்.
தொண்டர்கள் ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது, நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை கேட்டு வாங்கி, ஏழு இடங்களில் டெபாசிட் பறிபோய் இருக்கிறது என்றார். அதோடு பதிமூன்று இடங்களில் மூன்றாவது இடத்தில் வந்திருக்கிறது, பிற பாராளுமன்ற தொகுதிகளிலும் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.
தொண்டர்களை பிரித்து வைத்திருக்கும் காரணத்தினாலேயே ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்காமல் போனது, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய இந்த இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என்றார்.
சுயேட்சையாக தான் போட்டியிட்டு முப்பத்தி மூன்று சதவீத வாக்குகளை பெற்றிருப்பதாகவும், இது தொண்டர்களும், பொது மக்களும் தங்கள் பக்கத்தில் இருப்பதையே இது காட்டியிருப்பதாகவும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிட்ட போது பன்னீர் செல்வம் என்ற பெயரில் ஆறு பேர் களம் கண்டனர் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…
அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…
ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…
ஆண்களுக்கு பெண்கள் குறைந்தவர்கள் இல்லை என்ற பேச்சு எப்போதோ காலம்கடந்துவிட்டது. இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் பலதுறைகளில் சாதனை படைத்து, கோலோச்சிக்…