இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான உலக கோப்பை போட்டி அக்டோபர் 14 ஆம் தேதி ஆமதாபாத் நகரில் நடைபெற இருக்கிறது. முன்னதாக இந்த போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற இருந்தது. புதிய தேதி மாற்றத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் ஒப்புதல் தெரிவித்து உள்ளது.
பாகிஸ்தான் அணியுடனான போட்டியின் தேதியை மாற்ற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை விடுத்து இருந்தது. இதைத் தொடர்ந்து தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மற்றும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதும் போட்டி தேதி மாற்றப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஆமதாபாத்தில் அக்டோபர் 14 ஆம் தேதியும், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையேயான போட்டி ஐதராபாத்தில் அக்டோபர் 10 ஆம் தேதியும் மோதுகின்றன. முன்னதாக பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையேயான போட்டி அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆமதாபாத் நகரில் நவராத்திரி பண்டிகை துவங்கும் முதல் நாளில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டியின் தேதி மாற்றப்பட்டு இருக்கிறது. இது பற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பாகிஸ்தான் கரிக்கெட் கவுன்சிலை தொடர்பு கொண்டு தேதி மாற்றுவது குறித்த ஆலோசனை செய்யப்பட்டது.
தற்போது மாற்றப்பட்ட தேதிகள் அடங்கிய, உலக கோப்பை தொடருக்கான புதிய அட்டவனையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு மாற்றங்கள் மட்டுமின்றி, மற்ற அணிகள் மோதும் போட்டிகளின் தேதியும் மாற்றி அமைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஏற்கனவே வெளியான அட்டவனையின் படி பாகிஸ்தான் அணிக்கான போட்டி விவரங்கள் :
அக்டோபர் 6 – ஐதராபாத்தில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணி
அக்டோபர் 12 – ஐதராபாத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணி
அக்டோபர் 15 – ஆமதாபாத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணி
அக்டோபர் 20 – பெங்களூருவில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணி
அக்டோபர் 23 – சென்னையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணி
அக்டோபர் 27 – சென்னையில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணி
அக்டோபர் 31 – கொல்கத்தாவில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணி
நவம்பர் 4 – பெங்களூருவில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணி
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…