india
உங்களுக்கு பானிபூரி பிடிக்குமா..? 5 முதல் 7 வருடம் தொடர்ந்து சாப்பிட்டால் இந்த பாதிப்பு வரும்.. அதிர்ச்சி தகவல்..!
![panipoori - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/panipoori.jpg)
மக்கள் அதிக விரும்பி சாப்பிடும் பானி பூரிக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருள்களில் புற்றுநோய் உண்டாக்கும் கூறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
பானி பூரி சாப்பிடாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பானிபூரி என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் கடைகளில் சாப்பிடும் இந்த பானிபூரிகள் உடல்நலத்திற்கு நல்லதா? என்று கேட்டால் அது தயாரிக்கும் விதத்தில் தான் இருக்கிறது என்று கூறுகிறார்கள் நிபுணர்கள். பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகா பகுதிகளில் உணவு மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் பானி பூரி கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது பானி பூரி தயாரிப்பதற்கு பயன்படுத்தி வரும் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் கூறுகள் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது பானி பூரி தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் சாஸ் மற்றும் மீட்டா பவுடர் போன்றவற்றில் தீங்கு விளைவிக்கும் கூறுகள் அதிக அளவில் இருப்பதாகவும், இது மனித உடலின் ஆரோக்கியத்தை மோசமாக்கும் எனக் கூறுகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் புற்றுநோயை உண்டாக்கும் பொருள்களுக்கு விரைவில் தடை விதிக்க உணவு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து உணவு பாதுகாப்பு மற்றும் தரத்துறை ஆணையர் ஸ்ரீனிவாஸ் கூறியதாவது பானி பூரியில் பயன்படுத்தப்படும் காரம் மற்றும் மீட்டா பொருட்களில் ரசாயனங்கள் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிக காரம் சாப்பிடுவதாலும், இதுபோல ரசாயன பொருட்களை பயன்படுத்துவதாலும் வயிற்றுப்போக்கு ஏற்படுகின்றது.
பானி பூரி தொடர்ந்து 5 முதல் 7 வருடங்கள் சாப்பிட்டு வந்தால் அல்சர் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கின்றது. இது தொடர்பாக அமைச்சர் மற்றும் முதன்மை செயலாளரிடம் பேசி முடிவெடுக்கப்படும். 4 முதல் 5 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. வந்த பிறகு கூட்டம் நடத்தி பானிபூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களுக்கு தடை விதிக்க வாய்ப்பு இருக்கின்றது என்று அவர் தெரிவித்திருந்தார். ஏற்கனவே கோபி மஞ்சூரியன் மற்றும் கபாபில் புற்றுநோயை உண்டாக்கும் அதிக தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த உணவுகள் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
india
மீண்டும் மீண்டுமா… 15 நாட்களில்; 10-வது சம்பவம்- பதறும் பீகார்!
பீகாரில் மேலும் 3 பாலங்கள் இடிந்துவிழுந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது கடந்த 15 நாட்களில் 10-வது சம்பவமாகும்.
பீகாரின் சைவான் மற்றும் சம்பன் மாவட்டங்களில் நிகழ்ந்த இந்த சம்பவங்களில் நல்வாய்ப்பாக யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இடிந்துவிழுந்த 3 பாலங்களும் 30 முதல் 80 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவை என அம்மாநில பொதுப்பணித்துறை தெரிவித்திருப்பதோடு, இதுகுறித்த துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கிறது.
ஒரே நாளில் 4 பாலங்கள் இடிந்து விழுந்தும் முதலமைச்சர் நிதீஷ் குமார் இதுகுறித்து வாய் திறக்காதது ஏன் என எதிர்க்கட்சியான ஆர்ஜேடியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதற்கிடையே, பீகாரில் உள்ள பழைய பாலங்கள் மற்றும் சாலைகள் குறித்து ஆய்வினை உடனடியாக நடத்த சாலைப் போக்குவரத்துத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறைக்கு முதலமைச்சர் நிதீஷ் குமார் உத்தரவிட்டிருக்கிறார். இதுகுறித்து பேசிய ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் செயலாளர் சைத்தன்ய பிரசாத், `இடிந்து விழுந்த பாலங்கள் மற்றும் அவற்றின் பகுதிகள் போன்றவை மிகவும் பழமையானவை’ என்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
மேலும், `உரிய பாதுகாப்பு மற்றும் உறுதித் தன்மையோடு அவை கட்டப்படவில்லை என்றும், அந்தப் பாலங்கள் கட்டப்படும்போது போதுமான அளவுக்கு அஸ்திவாரங்கள் தோண்டப்படவில்லை. இதனாலேயே, இந்த மழைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் அவை அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன’ என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக, சைவான் மாவட்டத்தின் தியோரியா பகுதியில் இருந்த பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதன்பின்னர், தெக்ரா பகுதியில் உள்ள மற்றொரு பாலமும் இதேபோல் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவத்தில் யார் பொறுப்பாளி என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் பீகாரில் வலுத்துவருகிறது.
india
வேலை நேரத்துல ரீல்ஸ்… சிக்கலில் 8 கேரள அரசு ஊழியர்கள் 8 பேர்!
கேரளாவின் இன்ஸ்டா ரீல்ஸ் போட்ட திருவல்லா நகராட்சி ஊழியர்கள் 8 பேருக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள நகராட்சிதான் திருவல்லா. நகராட்சியைச் சேர்ந்த 8 ஊழியர்கள் இன்ஸ்டாவில் பாட்டுப் பாடி, டான்ஸ் ஆடிய ரீல்ஸ் ஒன்று சமீபத்தில் வைரலானது. அலுவலக வளாகத்தில் வைத்து எடுக்கப்பட்ட இந்த ரீல்ஸ் வைரலானது, அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து தகவலறிந்த திருவல்லா நகராட்சியின் செயலாளர், அலுவலக நேரத்தில் ரீல்ஸ் போட்டது ஏன் என்று விளக்கம் கேட்டு ஊழியர்கள் 8 பேருஜ்க்கும் ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இந்த நோட்டீஸுக்கு அவர்கள் 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்.
`அலுவலக நேரத்தில் ரீல்ஸ் போட்டதாகத் தெரியவந்த தகவலை அடுத்து அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இதில் என்னுடைய கடமையை மட்டுமே செய்திருக்கிறேன்’ என்று நகராட்சியின் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.
அதேநேரம், அலுவலக வேலை நேரத்தில் ரீல்ஸ் போடவில்லை என்றும் பணி இடைவெளியின்போதுதான் ரீல்ஸ் செய்ததாகவும் அந்த ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட நேரத்தில் மக்கள் பணி எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
Cricket
கையில் உலக கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணி… உற்சாக வரவேற்பு…!
கையில் உலக கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-ல் நடைபெற்ற டி20 உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இதன் மூலம் 17 வருடங்கள் கழித்து இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றுள்ளது.
சாதனை படைத்த இந்திய வீரர்கள் தாயகம் திரும்ப இருந்த நிலையில் புயல் மற்றும் மழை காரணமாக இந்திய திரும்ப முடியாமல் பார்படாசியில் சிக்கி தவித்தனர். இந்நிலையில் நேற்று இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலமாக பார்படாசிலிருந்து இந்தியா புறப்பட்டனர் . இன்று காலை இந்திய அணி வீரர்கள் டெல்லிக்கு வந்தடைந்தனர். டெல்லி விமான நிலையத்தின் இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
மேலும் உலக கோப்பையுடன் தாயகம் திரும்பி இருக்கும் இந்திய அணி வீரர்களை இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடி சந்திக்க இருக்கின்றார். இதைத்தொடர்ந்து இன்று மாலை மும்பை வான்கடா மைதானத்தில் இந்திய வீரர்கள் பேரணியாக உலக கோப்பையுடன் வலம் வருவார்கள் என்றும், ரசிகர்கள் படை சூழ திறந்தவெளி பஸ்ஸில் டி20 உலக கோப்பையுடன் பயணிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
india
ஹத்ராஸ் விபத்து நடந்தது எப்படி?!. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டி!..
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் எனும் கிராமத்தில் நேற்று ஒரு இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. பாபா நாராயணன் ஹரி என்கிற சாஹர் விஷ்வஹரி போலே பாபா சாமியார் இந்த விழாவை நடத்தினார். அந்த கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கானோர் சிக்கினர். தற்போது வரை 122 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
இந்த விழாவில் 80 ஆயிரம் பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது தெரியவந்திருக்கிறது. ஆன்மிக சொற்பொழிவு முடிந்தவுடன் பாபா காரில் ஏறி புறப்பட்டபோது அவரை பின் தொடர்ந்து பலரும் போயிருக்கிறார்கள். அவரின் கார் புறப்பட்டபோது அதன்பின்னால் பலரும் ஓடி இருக்கிறார்கள்.
அதில் பலரும் பாபாவின் காலடி மண்ணை எடுக்க கீழே குனிந்துள்ளனர். அப்போதுதான் கீழே குனிந்தவர்கள் மீது பலரும் ஏறி நடந்துள்ளனர். இதில் சிக்கிய பலரும் மூச்சி முட்டி இறந்திருக்கிறார்கள். மேலும், நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிக்கு அருகே சாக்கடை ஓட்டிக்கொண்டிருந்தது. பக்தர்கள் வேகமாக வெளியேறிய போது பலரும் அதில் விழுந்தார்கள். இப்படித்தான் 121 பேர் இறந்து போயிருக்கிறார்கள். குறிப்பாக இறந்து போனவர்களில் பலரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், விபத்து நடந்த இடத்தை உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதிதய்நாத் பார்வையிட்டார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘சொற்பொழிவு முடிந்ததும் போலே பாபாவை நோக்கி மக்கள் முண்டியடித்து சென்றதால் விபத்து ஏற்பட்டது. அவரை நோக்கி மக்கள் சென்றபோது நெரிசல் ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள். உயிரிழந்த 121 பேரில் 6 பேர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள்’ என அவர் கூறினார்.
india
ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் ராஜினாமா!. ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்..
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கிறார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் பதவியில் இருந்தவர் சம்பாய் சோரன். இவர் ராஞ்சியில் உள்ள ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து இன்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதைத்தொடர்ந்து ஆளுனரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கிறார் ஹேமந்த் சோரன்.
சட்ட விரோத பணிவர்த்தனை வழக்கில் சமீபத்தில் ஜாமினில் வெளிவந்தார் ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்க்கண்டின் முதல்வராக மாறவிருக்கிறார். தலைநகர் ராஞ்சியில் ஜார்க்கண்ட முக்தி மோர்ச்சா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மேற்கொண்ட ஆலோசனை கூட்டத்தில் ஹேமந்த் சோரனை முதல்வர் பதவியில் அமர வைப்பது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
செய்தியாளர்களிடம் பேசிய சம்பயி சோரன் ‘ கடந்த சில நாட்கள் முதல்வர் பதவியில் இருந்ததால் மாநில நிர்வாக பொறுப்புகளை கவனித்து வந்தேன். தற்போது ஹேமந்த் சோரன் திரும்பி வந்திருப்பதால் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசி இந்த முடிவை எடுத்திருக்கிறோம். எனவே, நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன்’ என கூறினார்.
-
Cricket2 days ago
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: சூர்யகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை – உண்மை இதுதான்!
-
india2 days ago
தமிழகத்தில் வெளிமாநில ஆம்னி பேருந்துகள்….? சுப்ரீம் கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!
-
latest news2 days ago
மாணவர்களின் கவனத்திற்கு…! நாளை முதல் ஜூலை 5-ம் தேதி வரை.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..
-
tech news2 days ago
ஓவராகும் ஓடிடி மோகம்… சப்ஸ்கிரிப்ஷனில் பெத்த தொகையை சேமிக்க சூப்பர் டிப்ஸ்…
-
Cricket20 hours ago
என்னையவா கலாய்ச்சீங்க… டி20ல் முதல் இந்திய வீரராக ஹர்திக் பாண்டியா செய்த சாதனை…
-
Cricket2 days ago
உலகிலேயே அதிகம் பகிரப்பட்ட இன்ஸ்டா போஸ்ட்… இது கோலி கில்லா!..
-
tech news1 day ago
ரூ. 1000 கோடி பட்ஜெட்.. சென்னையில் கேப்ஜெமினியின் புது ஆஃபீஸ்
-
tech news18 hours ago
பாரபட்சம் இருக்காது.. ஒரே பிராசஸருடன் வெளியாகும் ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள்.?