இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து முதல் முறையாக இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். சென்னையில் நடைபெற்ற இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ரிஷப் பண்ட் சதம் அடித்து அசத்தினார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரே டெஸ்ட் போட்டியில் விளையாடிய ரிஷப் பண்ட் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 39 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 109 ரன்களையும் குவித்து அசத்தினார் ரிஷப் பண்ட்.
இவரைப் போன்று யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் பிரபாத் ஜெயசூர்யா தரவரிசையில் முன்னேறியுள்ள நிலையில், கேப்டன் ரோகித் சர்மா மட்டும் சற்று பின்னடைவை சந்தித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்திலும், நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் இரண்டவாது இடத்திலும் உள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல், ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர். இந்திய கேப்டன் ரோகித் சர்மா இந்த பட்டியலில் பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதே போன்று விராட் கோலி இந்த பட்டியலில் 12 ஆவது இடத்தில் உள்ளார்.
வங்கதேசம் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 119 ரன்களை அடித்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்த இந்திய வீரர் சுப்மன் கில் சர்வதேச டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஐந்து இடங்கள் முன்னேறி தற்போது 14 இடத்திற்கு வந்துள்ளார்.
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…
இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…
அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…
ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…