Categories: latest newstamilnadu

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்… வாக்குச்சாவடியில் இதுக்கெல்லாம் NO… வெளியான அதிரடி கட்டுப்பாடுகள்…!

விக்ரவாண்டி இடைத்தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் வாக்காளர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியை சேர்ந்த திமுக சட்ட உறுப்பினர் புகழேந்தி கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருந்ததால் அந்த தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு இந்த தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிட்டு வருகிறார்கள். திமுக சார்பாக அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி அன்புமணி, நாம் தமிழர் சார்பாக டாக்டர் அபிநயா போட்டியிடுகின்றார். நேற்று முன்தினம் மாலை வரை பிரச்சாரம் விக்கிரவாண்டி தொகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இன்று காலை முதல் வாக்காளர்கள் வாக்களித்து வருகிறார்கள். விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 276 வாக்கு சாவடிகள் இருக்கின்றது. இதில் 44 வாக்கு சாவடிகள் சற்று பதட்டமானவை. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே வாக்காளர்களுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது வாக்காளர்கள் வாக்குப்பதிவு மையங்களுக்குள் செல்போன் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை செல்போன் எடுத்துச் சென்றால் வீட்டிற்கு போய் அதை வைத்து விட்டு வரும்படி வாக்காளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்களிக்க வருபவரிடம் செல்போன் இருக்கின்றதா என்பதை சோதித்த பிறகு தான் வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு சக்கர நாற்காலி, முதியவர்கள் வாக்களிக்க வசதியான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இன்று மாலை முடிவடைந்த பிறகு இதில் பதிவான வாக்குகள் வரும் 13ஆம் தேதி எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Ramya Sri

Recent Posts

வாக்களிக்க ஆர்வம் காட்டிய வாக்காளர்கள்…கலைகட்டிய ஜம்மு – காஷ்மீர் தேர்தல்…

ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…

15 hours ago

இந்த சேஞ்சுக்கு இவங்க தான் காரணம்…கை காட்டிய கம்பீர்…

கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…

17 hours ago

ப்ரோட்டா பிரசாதம்!….கோவில் திருவிழாவில் நடந்த விநோதம்…

பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…

18 hours ago

விரக்தியில் பேசும் பேச்சு…தமிழிசைக்கு திருமாவளவன் பதிலடி…

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…

19 hours ago

ஆதார், பான் போன்ற அரசு ஆவணங்களை வாட்ஸ்அப்-லேயே பெறலாம் – எப்படி தெரியுமா?

இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…

19 hours ago

நானெல்லாம் ஆஷஸ் விளையாடவே முடியாது போல.. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ஆஸி வீரர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…

20 hours ago