காத்மண்டு திருபுவன் விமான நிலையத்திலிருந்து பரிசோதனைக்காக அதிகாரிகளுடன் கிளம்பிய விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சௌர்யா ஏர்லைன்ஸ் இருந்து இரண்டு விமான அதிகாரிகள், 17 டெக்னீசியன்கள் உடன் போக்காராவிற்கு பராமரிப்பு பணிக்காக சென்ற விமானம் கிளம்பும்போது ஓடுபாதையில் ஏற்பட்ட சறுக்கல் காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் விமானி காப்பாற்றப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
விமானம் புறப்படும் போது திடீரென ஏற்பட்ட கோளாறால் கிழக்கு பகுதியில் வெடித்து சிதறியது. இதில் உள்ளே இருந்த அனைவரும் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது, 18 பேரின் உடல்களும் மீட்கப்பட்டிருக்கிறது. நேபாளத்திற்குள் உள்நாட்டு விமானங்களை இயக்கி வரும் சௌர்யா ஏர்லைன்ஸ், இரண்டு பாம்பார்டியர் CRJ-200 ஜெட் விமானங்களைப் பயன்படுத்தி வருகிறது. இவை இரண்டும் ப்ளைட் ரேடாரின் 24ன் படி சுமார் 20 ஆண்டுகள் பழமையானவை எனக் கூறப்படுகிறது.
நேபாளம் தன்னுடைய விமான போக்குவரத்து பாதுகாப்பில் கவனம் இல்லாமல் இருப்பதாக தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறது. கடந்த வருடம் ஏடி ஏர்லைன்ஸில் விமானி கவனக்குறைவால் மின் இணைப்பை துண்டித்தது எடுத்து விபத்து ஏற்பட்டு 72 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் காத்மண்டும் மலைப்பகுதியில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இதில் 167 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திராவிட முன்னேற்றக்…
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் கோரிக்கை குறித்த மனுக்களை…
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்த…
இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில்…
ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025…
இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…