Categories: indialatest news

சாதி வாரி கணக்கெடுப்பு தேவை…பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ள ராமதாஸ்…

நாடு முழுவதும் அடுத்த மாதங்களில் மேற்கொள்ளப் படவிருக்கும் 2021ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரி கணக்கெடுப்பாக நடத்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். சமூக நீதி காக்கப்பட இந்த ரீதியான கணக்கெடுப்பு தேவை எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடிக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கடிதம் அனுப்பியுள்ளார், அந்த கடிதத்தில் இந்தியா அனைத்து துறைகளிலும் உலக நாடுகளுடன் போட்டிபோட்டுக் கொண்டு முன்னேறி வருகிறது என்பதில் எந்தவித ஐயத்திற்கும் இடமில்லை, அதே நேரத்தில் சமூக நீதியைக் காப்பதில் பல்லாண்டுகளாக போடப்பட்டு வரும் முட்டுக்கட்டைகளை அகற்றுவது மட்டும் எட்டாக்கனியாகவே உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Population

தேசிய அளவிலும், மாநில அலவிலும் இட ஒதுக்கீட்டிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர் நீதிமன்றத்திலும் , உச்சநீதி மன்றத்திலும் பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளன.

இட ஒதுக்கீட்டின் நியாயத்தை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்களிலும் நிரூபிக்க சாதி வாரி மக்கள் தொகை புள்ளி விவரங்கள் தேவை. ஆனால் அது நம்மிடம் இல்லை என்றும் தனது கடிதத்தில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை எதிர்கொள்ள சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

இதையே பல்வேறு தருணங்களில் உச்ச நீதிமன்றமும், உயர் நீதி நீதிமன்றங்களும் வலியுறுத்தியுள்ளன என்பதாலும் அடுத்த சில மாதங்களில் மேற்கொள்ளப்பட இருக்கும் 2021ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரியானதாக எடுக்க வேண்டும், இதற்கான வறலாற்றுச் சிறப்பு மிக்க ஆணையை பிறப்பிக்க வேண்டும் என தான் கேட்டுக்கொள்வதாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

sankar sundar

Recent Posts

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

17 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

18 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

21 hours ago

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…

21 hours ago

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…

22 hours ago

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…

1 day ago