latest news
மன்மதனாக வாழ்ந்து வந்த மாணவன்…மடக்கி பிடித்த போலீஸ்….
நாகரீக மாற்றத்தினை முன்னேற்றப் பாதைக்கு மட்டுமே பயன்படுத்தாமல், அதனை தப்பான வழியில் பயன்படுத்தி வழக்குகளில் சிக்கி நல்ல விதங்களில் அனுபவித்து வாழ வேண்டிய வாழ்க்கையை விதியே என நினைத்து நொந்து வாழ்ந்து முடிக்கும் அவலத்திற்கு எடுத்துச் செல்லும் பல விதமான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது என்பது செய்திகளின் மூலமே உலகிற்கு தெரியப்படுத்தப்பட்டு வருகிறது.
கல்லூரி வாழ்க்கையில் எண்ணிலடங்கா இன்பங்களை மட்டுமே அனுபவித்து விட வேண்டும் என நினைத்து மாணவ – மாணவியர் தங்களை பல விதமான குற்றச்செயல்களுக்கு ஆட்படுத்தி இளம் வயதிலேயே தங்களது நல்வாழ்விற்கான இடைஞ்சல்களை அவர்களே உண்டாக்கியும் வருவதும் அறியப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தன்னை மன்மதனாக நினைத்துக் கொண்டு பல பெண்களை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஸ்ரீதர்ஷன் என்பவரும் அவருடன் அதே வகுப்பில் பயிலும் அதே வகுப்பில் படித்து வந்த மாணவி ஒருவரும் காதலித்து வந்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் தனிமையில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்டங்களை வைத்து கொண்டு தொடர்ந்து அந்த மாணவியை மிரட்டி வந்திருக்கிறார் ஸ்ரீதர்ஷன்.
இவரது நடவடிக்கை பிடிக்காத அந்த மாணவி ஸ்ரீதர்ஷனிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். இதனால் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் ஸ்ரீதர்ஷன் அதே கல்லூரியில் படித்து வரும் வேறொரு மாணவியை காதலித்து வந்திருக்கிறார்.
மீண்டும் அதே போல இந்த மாணவியிடமும் தனிமையில் இருந்த போது இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை காட்டி மிரட்டியிருக்கிறார். இதனையடுத்து மாணவர் ஸ்ரீதர் மீது காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
புகாரினை அடுத்து மாணவர் ஸ்ரீதர்ஷனை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அதில் மாணவிகளுடன் தனிமையில் இருக்கும் படங்களை வைத்து பல மாணவிகளை இவர் மிரட்டி வந்திருப்பது தெரிய வந்துள்ளது.
latest news
சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும், வெயிலின தாக்கமும் இருந்து வருவதால் தமிழகத்தின் பல இடங்களைச் சேர்ந்த பொது மக்களும் சொல்ல முடியாத இன்னலுக்கு ஆளாகி வந்திருந்தனர். மழை பெய்யுமா?, வெப்பம் குறையுமா? குளிர்ச்சி பிறக்குமா? என்பது கூட பிரார்த்தனைகளாக இருக்கும் அளவிற்கு வெயில் விஷ்வரூபம் எடுத்து ஆடி வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் தட்ப, வெப்ப நிலை குறித்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தின் பல மாவட்டங்களுகளில் இன்று லேசானது முதல் வரையிலும் மிதமானது வரையிலான மற்றும் கனமழை பெய்யக்கூடிய இடங்கள் குறித்த தனது கணிப்பை சொல்லியிருக்கிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்.அதே நேரத்தில் நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமைலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சொல்லியிருக்கிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்ப நிலை 35 டிகிரி முதல் 36 டிகிரியை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்ப நிலை 26 டிகிரி முதல் 27 டிகிரி வரை இருக்கும் எனவும் தனது ஆய்வு அறிக்கை மூலமாக சொல்லியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்
Cricket
இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி கடந்த வாரம் சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்ததோடு, இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இரு அணிகள் இடையிலான முதலாவது போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி கான்பூரில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்திய வீர்ர்களான விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவை அழைத்து நிற்க வைத்து, அவர் முன் அவரது பந்துவீச்சை செய்து காட்டிய சம்பவம் அரங்கேறியது.
கான்பூரில் நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஆட்டம் துவங்கும் முன்பே, இந்த சேட்டை சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அப்போது விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா பும்ராவின் முன் அவரது பந்துவீச்சு ஆக்ஷன் எப்படி இருக்கும் என்பதை செய்து காட்டினர். இதனை துவக்கத்தில் இருந்தே பார்த்துக் கொண்டிருந்த இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட் வாய்விட்டு சிரித்தார்.
களத்தில் போட்டி துவங்கும் முன் இரு வீரர்கள் பும்ராவை கலாய்க்கும் சம்பவத்தை பார்த்து சிரித்த ரியான், ஒருக்கட்டத்தில் சிரிப்பை அடக்க முடியாமல் தான் அணிந்திருந்த குளோவ் மூலம் முகத்தை மறைத்துக் கொண்டார்.
Cricket
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனை.. ஜடேஜாவின் சூப்பர் சம்பவம்
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து அசத்தியுள்ளார். 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை எந்த வீரரும் செய்யாத சாதனைக்கு ஜடேஜா சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000-க்கும் அதிக ரன்கள் மற்றும் 200-க்கும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார். இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது ஜடேஜா இந்த சாதனையை படைத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஜடேஜா இந்த சாதனையை படைத்துள்ள நிலையில், இதே சாதனையை மற்றொரு வீரர் சமன் செய்யும் நிலையில் உள்ளார்.
இந்த வீரரும் இந்திய அணியில் தற்போது விளையாடி வருபவர் தான். இந்திய அணியின் மற்றொரு ஆல்-ரவுண்டர் வீரராக சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஜடேஜாவின் இந்த சாதனையை நெருங்கி வருகிறார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வின் இதுவரை 1943 ரன்களையும், 369 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.
ரவீந்திர ஜடேஜா தற்போது 299 விக்கெட்டுகள் மற்றும் 3122 ரன்களை அடித்துள்ள நிலையில், அவர் இன்னும் ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தினால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் மற்றும் 3000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைக்க முடியும்.
Cricket
INDvBAN 2வது டெஸ்ட்: கருணை காட்டாத மழை.. ஒருபந்து கூட போடல, 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த வாரம் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.
இதன் தொடர்ச்சியாக இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தர பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி நிதானமாக ஆடியது.
முதல் நாள் உணவு இடைவேளை வரை அந்த அணி 74 ரன்களை மட்டுமே குவித்து இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இடையில் மழை காரணமாக போட்டி சிறிது நேரம் தடைப்பட்டது. பிறகு உணவு இடைவெளிக்குப் பின் போட்டி மீண்டும் துவங்கியது. பிறகு மீண்டும் மழை குறுக்கிட்டதால், நேற்றைய ஆட்டம் பாதியில் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முதல் நாளில் வங்கதேசம் அணி மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்களை அடித்திருந்தது.
இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை 9.30 மணிக்கு துவங்க இருந்தது. எனினும், தொடர் மழை காரணமாக இன்றைய போட்டி ஆரம்பிக்கப்படாமல் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டு வந்தது. மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகும் களத்தில் போட்டியை நடத்த முடியாத சூழல் நிலவி வந்துள்ளது.
இதனால் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு விட்டது. இன்றைய நாளில் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி நிறுத்தப்பட்டு இருப்பது ரசிகர்கள் மற்றும் இரு அணி வீரர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
latest news
ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஹெச்.டி.குமாரசாமி மந்திரியாக உள்ளார். அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட பிறகே அவர் ஜாமின் பெற்றார் எனவும் சொல்லியிருக்கிறார்.
மூடா மோசடி தொடர்பாக கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்ய கவர்னர் அளித்த உத்தரவு செல்லும் என கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து முறைகேடடு தொடர்பாக லோக் ஆயுக்தா விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ராஜினாமா சித்தராமையா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தி வருகிறது.
இதெல்லாம் நமது அரசியலை சீர்குலப்பதற்கான அரசியல் வேலை, அதை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள், லோட்டஸ் ஆபரேசனை முயற்சி செய்தார்கள், அது தோல்வி அடைந்தது, ஆட்சி அமைப்பதற்கான எம்.எல்.ஏக்கள் இல்லாமல் இரண்டு முறை ஆட்சி அமைத்தார்கள் எடியூரப்பா வெற்றி பெற்றாரா? என கேட்டிருந்தார்.
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் ஹெச்.டி.குமாரசாமி இடம் பிடித்துள்ளார். மந்திரியாக உள்ள அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட பிறகே அவர் ஜாமீன் பெற்றிருக்கிறார் என கூறியிருக்கும் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தான் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்பதனையும் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். மூடா மோசடி தொடர்பான விஷயங்களுக்கு பிறகு கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பு ஏற்படத் துவங்கியது.
-
Cricket1 day ago
களத்தில் சண்டை.. பவுலருக்கு சோக்-ஸ்லாம் போட்ட பேட்டர்.. வீடியோ வைரல்
-
Cricket1 day ago
நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…
-
Cricket1 day ago
147 ஆண்டுகளில் முதல்முறை.. இலங்கை வீரர் மிரட்டல்.. கவாஸ்கர் கூட இந்த சாதனை படைக்கல
-
latest news1 day ago
வட்டியே இல்ல.. பெண்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்கும் வேற லெவல் அரசு திட்டம்
-
Finance1 day ago
ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…
-
Cricket1 day ago
இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…
-
latest news21 hours ago
ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…
-
Cricket1 day ago
INDvsBAN 2வது டெஸ்ட்: கான்பூரில் பாதுகாப்பு குளறுபடி, UPCA கொடுத்த அப்டேட் என்ன தெரியுமா?