Categories: latest newstamilnadu

மன்மதனாக வாழ்ந்து வந்த மாணவன்…மடக்கி பிடித்த போலீஸ்….

நாகரீக மாற்றத்தினை முன்னேற்றப் பாதைக்கு மட்டுமே பயன்படுத்தாமல், அதனை தப்பான வழியில் பயன்படுத்தி வழக்குகளில் சிக்கி நல்ல விதங்களில் அனுபவித்து வாழ வேண்டிய வாழ்க்கையை விதியே என நினைத்து நொந்து வாழ்ந்து முடிக்கும் அவலத்திற்கு எடுத்துச் செல்லும் பல விதமான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது என்பது செய்திகளின் மூலமே உலகிற்கு தெரியப்படுத்தப்பட்டு வருகிறது.

கல்லூரி வாழ்க்கையில் எண்ணிலடங்கா இன்பங்களை மட்டுமே அனுபவித்து விட வேண்டும் என நினைத்து மாணவ – மாணவியர் தங்களை பல விதமான குற்றச்செயல்களுக்கு ஆட்படுத்தி இளம் வயதிலேயே தங்களது நல்வாழ்விற்கான  இடைஞ்சல்களை அவர்களே உண்டாக்கியும் வருவதும் அறியப்பட்டு வருகிறது.

Student Arrest

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தன்னை மன்மதனாக நினைத்துக் கொண்டு பல பெண்களை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஸ்ரீதர்ஷன் என்பவரும் அவருடன் அதே வகுப்பில் பயிலும் அதே வகுப்பில் படித்து வந்த மாணவி ஒருவரும் காதலித்து வந்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் தனிமையில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்டங்களை வைத்து கொண்டு தொடர்ந்து அந்த மாணவியை மிரட்டி வந்திருக்கிறார் ஸ்ரீதர்ஷன்.

இவரது நடவடிக்கை பிடிக்காத அந்த மாணவி ஸ்ரீதர்ஷனிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். இதனால் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் ஸ்ரீதர்ஷன் அதே கல்லூரியில் படித்து வரும் வேறொரு மாணவியை காதலித்து வந்திருக்கிறார்.

மீண்டும் அதே போல இந்த மாணவியிடமும் தனிமையில் இருந்த போது இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை காட்டி மிரட்டியிருக்கிறார். இதனையடுத்து மாணவர் ஸ்ரீதர் மீது காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

புகாரினை அடுத்து மாணவர் ஸ்ரீதர்ஷனை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அதில் மாணவிகளுடன் தனிமையில் இருக்கும் படங்களை வைத்து பல மாணவிகளை இவர் மிரட்டி வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

sankar sundar

Recent Posts

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

19 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

20 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

23 hours ago

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…

24 hours ago

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…

1 day ago

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…

1 day ago