ரோட்டில் கொட்டிக்கிடந்த தக்காளிகளை இரவு முழுவதும் உத்தரபிரதேச போலீசார் காவல் காத்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் 18 டன் தக்காளிகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்த லாரி உத்திர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதி அருகே கடக்க முயன்ற போது திடீரென்று அங்கு குறுக்கே பசுமாடுகள் வந்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தடுமாறி கவிழ்ந்தது. இதனால் வண்டியில் இருந்த தக்காளிகள் அனைத்தும் சாலையில் சிதறிவிட்டன.
இந்த விபத்தில் லாரியின் பின்னால் வந்து கொண்டிருந்த பெண் ஒருவரும் பலத்த காயமடைந்தார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இரவு நேரம் என்பதால் சாலையில் கிடந்த தக்காளிகளை சேகரிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.
இதனால் காவல்துறையினர் விடியும் வரை காத்திருப்பதற்கு முடிவு செய்தார்கள். ஆனால் தக்காளி தட்டுப்பாடு காரணமாக தக்காளி விலை கிலோ 100 வரை விற்பனையாகி வரும் நிலையில் தக்காளி திருடு போகும் அபாயம் இருந்தது. இதனால் சாலையிலேயே தக்காளிகளுக்கு காவலாக இரவு முழுவதும் போலீசார் காத்திருந்தார்கள். இது தொடர்பான வீடியோவானது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த பலரும் தக்காளி விக்கிற விலைக்கு பாதுகாப்பு கொடுத்து தானே ஆகணும் என்று கூறி வருகிறார்கள்.
இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…
ஐக்கிய அரபு எமீரகத்தில் பெண்களுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தது. தொடர் துவங்கும் முன்னர்…
18-வது முறையாக இரட்டை சதம் அடித்து புஜாரா சச்சின், பிராட்மேன் போன்ற ஜாம்பவான் பட்டியலில் இணைந்திருக்கின்றார். 90-வது ரஞ்சி கோப்பை…
பிட்னஸ் இல்லாமல் இருந்த வீரரை மும்பை அணி ரஞ்சி கோப்பை அணியில் இருந்து விடுத்து விட்டதாக இருக்கின்றது. இந்திய அணியின்…
நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு யுபியை பேமெண்ட்க்கு பதிலாக யுபிஐ வாலட்டை பயன்படுத்துவது தான் நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.…
Flipkart தளத்தில் தற்போது பிக் தீபாவளி சேல் நடைபெற்று வருகின்றது இந்த விற்பனையில் மிக குறைந்த விலையில் ஏராளமான செல்போன்கள்…