Connect with us

latest news

நான் முதல்வன் திட்டம்.. இதுவரை 25,000 மாணவர்களுக்கு வேலை.. 8 லட்சம் வரை சம்பளம்..!

Published

on

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இதுவரை 25 ஆயிரம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழக அரசு சார்பாக நான் முதல்வன் என்ற திட்டத்தின் மூலமாக பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களில் வேலை வாங்கிக் கொடுப்பதற்கு அரசு உதவி செய்து வருகின்றது. கடந்த ஜூன் 18ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மாநில அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல துறைகளில் வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நடப்பாண்டில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பாக ஓலோ எலக்ட்ரிக் நிறுவனம் மற்றும் எலக்ட்ரிக் வாகன ஆலைகளில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து  Accenture, Amazon, Ashok Leyland, BOSCH, Caterpiller India, Daikin, போர்டு, ஹெச்.சி.எல் டெக் மற்றும் எல் அண்ட் டி போன்ற நிறுவனங்களும் பாலிடெக்னிக் மாணவர்களை வேலைக்கு அமர்த்தி இருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் இவர்களுக்கு ஆண்டுக்கு 2 லட்சம் முதல் 8 லட்சம் வரை சம்பளமாகவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 252 கல்லூரிகளில் நான் முதல்வன் வேலை வாய்ப்பு திட்டத்தில் பங்கேற்று இருக்கின்றனர். இதன் மூலமாக இந்த ஆண்டில் இறுதி ஆண்டு படித்து வரும் 58 ஆயிரம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான நடைமுறை தொடரும் என்று கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்திருக்கிறார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

latest news

மகளின் அந்தரங்க வீடியோவை காட்டி காசு கேட்ட இளைஞர்… சம்பவம் செய்த தந்தை…திருப்பூரில் பயங்கரம்

Published

on

By

மொபைல் மோகம் அதிகரித்ததில் இருந்து இளைஞர்கள் செய்யும் குற்றச்செயலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அந்தரங்க விஷயங்களை புகைப்படமாக எடுப்பது பின்னர் அதையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதையும் செய்து வருகின்றனர்.

திண்டுக்கலை சேர்ந்த அன்பு(25) என்பவர் திருப்பூர் மாவட்டம் கணக்காம்பாளையத்தில் பைனான்ஸ் பிசினஸ் நடத்தி வந்தார். இவருக்கு அப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் இருந்து இருக்கிறது. இருவரும் நெருக்கமாக இருந்ததை வீடியோ, புகைப்படமாகவும் அன்பு எடுத்து வைத்து இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை ஒருநாள் குடித்துக்கொண்டு இருக்கும் தன்னுடைய நண்பர் தமிழரசனிடம் காட்ட அவருக்கு இதை வைத்து காசு பறிக்கலாம் என்ற எண்ணம் தோன்ற அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அன்பிடம் இருந்து வாங்கி இருக்கிறார். அதை சிறுமியின் தந்தை சுந்தர்ராஜனுக்கு அனுப்பி காசு கேட்டு இருக்கிறார் தமிழரசன்.

இது பிரச்னையாக மாற சிறுமியின் தந்தை அவிநாசி காவல்நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார். பின்னர் இவர்களிடம் பிரச்னை செய்யாமல் தன்னுடைய பெண் படங்களை வாங்கிவிட்டு இவர்களை காலி செய்ய வேண்டும் என திட்டமிட்டு கொள்கிறார். இந்த திட்டத்தினை நிறைவேற்ற தமிழரசனின் நண்பரான செல்லத்துரை என்பவரை நாடி இருக்கிறார்.

அவர்கள் திட்டப்படி சம்பவத்தன்று அன்பு, தமிழரசனின் நண்பர் செல்லத்துரை, சுந்தர்ராஜன் மூவரும் திருமுருகன்பூண்டி டாஸ்மாக்கில் குடித்து உள்ளனர். செல்லத்துரை இந்த விஷயத்தினை தனியாக பேச காந்திநகர் அருகே உள்ள அங்கையர் செல்வன் என்பவர் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். நான் இறங்கிய பின்னர் நீ இறங்கு எனக் கூறிய செல்லத்துரையை தொடர்ந்து அன்பு இறங்கினார்.

இவர்கள் திட்டப்படி வீட்டில் ஒளிந்திருந்த 8 பேர் அடங்கிய கூலிப்படை அன்புவை துரத்தி துரத்தி வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதனையடுத்து அன்புவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். சிறுமியின் தந்தையை விசாரித்து வரும் நிலையில் பலர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

Continue Reading

latest news

பஸ் கண்டக்டர்களுக்கு பரிசு… இத செஞ்சா மட்டும் போதும்… போக்குவரத்துதுறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

Published

on

யுபிஐ செயலி மூலமாக அதிக டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் பேருந்து நடத்துனர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்கும் வசதியை கொண்டு வந்திருக்கிறார்கள். இதன் மூலமாக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலமாக பணம் செலுத்தி பயன்டிகடுகளை பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது குறிப்பிட பேருந்துகளில் அதாவது அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது கூகுள் பே, போன் பே மற்றும் யுபிஐ-யை போன்றவற்றின் மூலமாக பணம் செலுத்தி பயண சீட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும். இந்த முறையை பயணிகளிடம் ஊக்குவிக்கும் விதமாக போக்குவரத்து கழகம் சார்பாக ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதில் “அரசு பேருந்துகளில் ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக மின்னணு பரிவர்த்தனை எண்ணிக்கை மூலம் பயணிகளுக்கு பயண சீட்டு வழங்கும் நடத்துனர்களுக்கு பரிசு தொகையும் அத்துடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளிடம் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடத்துனர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று வெளியான இந்த அறிவிப்பு நடத்துனர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

Continue Reading

latest news

90 மி.லி, பிளாஸ்டிக்கா இல்ல கண்ணாடி பாட்டிலா…? தமிழக அரசு பரிசீலினை… அவங்களே விட்டாலும் இவங்க விடமாட்டாங்க போலயே…

Published

on

90 மில்லி லிட்டர் மதுபானத்தை எந்த பாட்டிலில் விற்பனை செய்வது என்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் சாப்பிட்டு சுமார் 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். அரசு விற்பனை செய்யும் மது பாட்டில்களை விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு வசதி இல்லாத ஏழை மக்கள் இது போன்ற குறைந்த விலையில் கிடைக்கும் கள்ளச்சாராயங்களை குடித்து வருகிறார்கள். இதனால் தமிழக அரசு குறைந்த விலையில் டெட்ரா பேக் என்ற மது விற்பனையை செய்ய வேண்டும் என்று குரல் எழுந்தது.

இதற்கு பலரும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தார்கள். ஏற்கனவே கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழகத்தில் கள்ளச்சாராயர் சாவு அரங்கேறியதை தொடர்ந்து 100 மில்லி லிட்டர் ரூபாய் 15 என்கின்ற மலிவு விலையில் மது விற்பனையை தொடங்கியது தமிழக அரசு. அதன் பின்னர் அந்த திட்டம் நாளடைவில் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் அந்த திட்டத்தை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கின்றது.

தமிழகத்தில் பூரண மது விலக்கு  கொண்டு வர வேண்டும் என்பது பலரது விருப்பம். ஆனால் தற்போது அது இல்லை என்பதை சட்டசபையில் அமைச்சர் முத்துசாமி கூறிவிட்டார். இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் கூறிய போது நமது பக்கத்து மாநிலங்களில் அதாவது கேரளா, கர்நாடகம், ஆந்திரா என அனைத்து மாநிலங்களிலும் மது விற்பனை நடைபெறும் போது நாம் மட்டும் எப்படி பற்றி கொள்ளாத கற்பூரமாக இருக்க முடியும் என்று கூறியிருந்தார்.

இதை வைத்து பார்க்கும் போது தமிழகத்தில் பூரண மதுவிலக்கு இப்போது இல்லை என்பது உறுதியாகிவிட்டது. எனவே ஏழை மக்கள் கள்ளச்சாராயம் வாங்குவதற்கு பதில் குறைந்த விலையில் மது பானங்களை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இதனால் 90 மில்லி லிட்டர் மது விற்பனையை தொடங்க உள்ள நிலையில், அதனை கண்ணாடி பாட்டிலில் அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் விற்பனை செய்யலாமா என்று பரிசீலித்து வருகின்றது. கடைசியில் பிளாஸ்டிக் பாட்டில் தான் சிறந்த முறை என்பது தெரியவந்தது. ஆனால் இந்த திட்டம் குறித்த பரிசீலனை ஆரம்ப கட்டத்தில் தான் இருப்பதாகவும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

Continue Reading

india

மீண்டும் மீண்டுமா… 15 நாட்களில்; 10-வது சம்பவம்- பதறும் பீகார்!

Published

on

By

பீகாரில் மேலும் 3 பாலங்கள் இடிந்துவிழுந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது கடந்த 15 நாட்களில் 10-வது சம்பவமாகும்.

பீகாரின் சைவான் மற்றும் சம்பன் மாவட்டங்களில் நிகழ்ந்த இந்த சம்பவங்களில் நல்வாய்ப்பாக யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இடிந்துவிழுந்த 3 பாலங்களும் 30 முதல் 80 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவை என அம்மாநில பொதுப்பணித்துறை தெரிவித்திருப்பதோடு, இதுகுறித்த துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கிறது.

ஒரே நாளில் 4 பாலங்கள் இடிந்து விழுந்தும் முதலமைச்சர் நிதீஷ் குமார் இதுகுறித்து வாய் திறக்காதது ஏன் என எதிர்க்கட்சியான ஆர்ஜேடியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதற்கிடையே, பீகாரில் உள்ள பழைய பாலங்கள் மற்றும் சாலைகள் குறித்து ஆய்வினை உடனடியாக நடத்த சாலைப் போக்குவரத்துத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறைக்கு முதலமைச்சர் நிதீஷ் குமார் உத்தரவிட்டிருக்கிறார். இதுகுறித்து பேசிய ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் செயலாளர் சைத்தன்ய பிரசாத், `இடிந்து விழுந்த பாலங்கள் மற்றும் அவற்றின் பகுதிகள் போன்றவை மிகவும் பழமையானவை’ என்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

மேலும், `உரிய பாதுகாப்பு மற்றும் உறுதித் தன்மையோடு அவை கட்டப்படவில்லை என்றும், அந்தப் பாலங்கள் கட்டப்படும்போது போதுமான அளவுக்கு அஸ்திவாரங்கள் தோண்டப்படவில்லை. இதனாலேயே, இந்த மழைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் அவை அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன’ என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக, சைவான் மாவட்டத்தின் தியோரியா பகுதியில் இருந்த பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதன்பின்னர், தெக்ரா பகுதியில் உள்ள மற்றொரு பாலமும் இதேபோல் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவத்தில் யார் பொறுப்பாளி என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் பீகாரில் வலுத்துவருகிறது.

Continue Reading

latest news

இன்னைக்கு மிஸ்ஸே ஆகாது… ஜூலை மாதம் டமால், டுமில் தான்… வெதர்மேன் சொன்ன அசத்தல் ரிப்போர்ட்!..

Published

on

நேற்று தமிழகத்தில் பல பகுதிகளில் மலை வெளுத்து வாங்கிய நிலையில் சென்னையில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை நேற்று இரவு முழுவதும் கொட்டி தீர்த்து விட்டதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து இருக்கின்றார்.

தமிழகத்தில் அதுவும் சென்னையில் நேற்று பகல் பொழுதில் வெயில் வாட்டி வதைத்தது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கடுமையான புழுக்கம் இருந்தது . அதைத் தொடர்ந்து நேற்று இரவு குளிர்ந்த காற்று வீசு தொடங்கி கனமழை கொட்டி தீர்த்து விட்டது. இடி மின்னலுடன் மலை வெளுத்து வாங்கியதால் வானிலை இதமான சூழலுக்கு மாறியது .

விட்டுவிட்டு பெய்த மழையால் சென்னை வளசரவாக்கம், கோடம்பாக்கம், போரூர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதை தொடர்ந்து மழை குறித்து தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டு இருக்கின்றார். அதில் ஜூலை மாதத்தில் பெய்ய வேண்டிய மொத்த மழையின் அளவு 10 சென்டிமீட்டர்.

அதில் நேற்று பெய்த மழையில் ஒரு மணி நேரத்திலேயே 6 cm மழை பதிவாகிவிட்டதாக கூறியிருந்தார். ஜூன் மாதம் 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் தான் மழைப்பொழிவு அதிகமாக இருந்தது என்று தெரிவித்தார். மேலும் நேற்று அவர் வெளியிட்ட பதிவில் இன்று மிஸ் ஆகாது. காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பகுதிக்களில் ஜூலை மாதம் டமால் டுமீல் என்று மழை தொடங்கும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதைப்போலவே நேற்று இரவு நகரின் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. அது மட்டும் இல்லாமல் கும்மிடிப்பூண்டி, தாம்பரம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. நுங்கம்பாக்கம் ரோகித் டி20 சாதனையை சமன் செய்ததாக மிகவும் கிண்டலாக கூறி இருந்தார். அதிவேகமாக 50 அடித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 30 நிமிடங்களுக்குள் 50 மில்லி மீட்டர் அடித்து ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்து விட்டது என்று அவர் பதிவிட்டு இருந்தார்.

Continue Reading

Trending

Exit mobile version