மகாராஷ்டிராவை சேர்ந்த பூஜா கேட்கர் ஐஏஎஸ் தேர்வில் ஏகப்பட்ட முறைகேடுகள் செய்தது வெளிச்சத்திற்கு வந்திருக்கும் நிலையில் அவருடைய பயிற்சி பணி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் மீண்டும் தேர்வு எழுதுவதற்கும் யுபிஎஸ்சி ஆணையம் தடை விதித்துள்ளது.
இது குறித்து யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பூஜா அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையில் தேர்வெழுதி இருக்கிறார். மேலும், தனது பெயர் மற்றும் பெற்றோர் பெயரை மாற்றி மோசடி செய்தும், சாதி சான்றிதழ் கோளாறு, மாற்றுத்திறனாளி என கொடுத்த சான்றிதழும் முறைகேடு செய்து இருக்கிறார்.
மேலும் பயிற்சி பணியின் போது தனக்கென தனி அலுவலகம் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை கேட்டதும், அவருடைய காரில் சைரன் மாட்டியதும் மேலும் பிரச்னையாக வெடித்தது. இதை தொடர்ந்து யுபிஎஸ்சி ஆணையம் அவரை பணியில் இருந்து நீக்கி உடனே பயிற்சி மையத்துக்கு வர கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாநில அரசு அனுப்பிய விசாரணை அறிக்கையில் பூஜா கேட்கர் ஐஏஎஸ் தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து அவரி இனி எதிர்காலத்தில் ஐஏஎஸ் தேர்வில் கலந்து கொள்ளாதபடி அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து டெல்லி போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இந்நிலையில் பூஜா கேட்கர் மொபைலை அனைத்து விட்டு தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது. கைது நடவடிக்கைக்கு பயந்து பூஜா துபாய் தப்பி சென்று இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர் தரப்பில் பூஜாவிற்கு முன் ஜாமீன் கேட்டு டெல்லி ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதை விசாரித்த நீதிபதிகள் பூஜா கேட்கர் மீது இருப்பது சீரியஸான வழக்கு. அதற்கு முன் ஜாமீன் தர முடியாது. அவருக்கு போலீஸ் காவல் தேவைப்படுகிறது. இந்த முறைகேட்டில் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளனர் என்பதை பூஜா மூலம் தான் தெரிந்து கொள்ள முடியும். அதனால் அவரின் முன்ஜாமீன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தனர்.
இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட…
ஐபிஎல் 2025 தொடரில் இருந்து வீரர்கள் சம்பாதிக்கும் தொகை சற்று அதிகரிக்க உள்ளது. இதற்காக பிசிசிஐ புதிய விதிகளை அமலுக்கு…
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற கேள்விக்கு ஒருவழியாக பதில் கிடைத்துவிட்டது.…
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…