Categories: latest newsWorld News

தாயாவதை தடுத்த சம்பவம்…நாயால் நேர்ந்த விபரீதம்…

வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதுவும் அவற்றை தங்களது வீட்டில் ஒருவராகவும், குடும்பத்து நபராகவும் பார்த்து வருபவர்கள் நிறைய பேர் இருந்து வருகிறார்கள். தங்களது எஜமான்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு பெட்டிக்குள் பாம்பாகவும் இருந்து வருகிறது இத்தகைய வீட்டு வளர்ப்பு செல்லப் பிராணிகள்.

சில நேரங்கள் இவைகளால் வீட்டில் வசிப்பவர்களுக்கும் கூட எதிர்பாராத பிரச்சனைகள் வந்து விடத் தான் செய்கிறது, அவைகளின் அறியாமையாலும், அவைகளுக்கே உரிய மிருகத்தனமான புத்தியாலும்.  நான்கு மாத கர்ப்பிணிப் பெண் வயிற்றில் ஏறிய நாயினால் கருகலைந்த அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

சீனாவில் லீ என்பவர் தனது வீட்டின் செல்லப் பிராணியாக நாயை வளர்த்து வருகிறார்.

Dog

அந்த நாய் நாற்பத்தி ஓரு வயதான பெண்னின் வயிற்றில் ஏறி இருக்கிறது. நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த அப்பெண் வயிற்றில் லீயின் வளர்ப்பு நாய் ஏறியதால் அப்பெண்னின் கரு கலைந்துள்ளது.

லீயின் நாய் செய்த இந்த செயலால் தனக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக் கருவுற்றிருந்த பெண் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட அப்பெண்மணிக்கு லீ பத்து லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

நீண்ட நாட்களாக தனக்கு குழந்தை இல்லாததால் கடந்த மூன்று ஆண்டுகளாக எடுத்து வந்த தொடர் சிகிட்சைக்கு பிறகே தான் கருவுற்றதாகவும், ஆனால் இப்படி ஒரு துயர சம்பவம் நடந்து விட்டது எனவும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் வேதனை தெரிவித்துள்ளார்.

sankar sundar

Recent Posts

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

1 hour ago

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

2 hours ago

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

2 hours ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

3 hours ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

3 hours ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

4 hours ago