பிட்னஸ் இல்லாமல் இருந்த வீரரை மும்பை அணி ரஞ்சி கோப்பை அணியில் இருந்து விடுத்து விட்டதாக இருக்கின்றது.
இந்திய அணியின் முக்கிய வீரர் பிரித்வி ஷா. 2018 ஆம் ஆண்டு ராஜ்கோட் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி மூலமாக கிரிக்கெட்டில் முதன்முதலாக அறிமுகமானார். துவக்கம் முதலே சிறப்பாக ஆடி வந்த இவர் அடுத்த சேவாக்காக வலம் வருவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அடுத்தடுத்து போட்டிகளில் தொடர்ந்து சொதப்பலாக விளையாடி இந்திய அணியில் இருந்து வெளியேறினார்.
இதையடுத்து பிரித்வி ஷா தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். அது மட்டும் இல்லாமல் ஐபிஎல் இல் டெல்லி கேப்டன் அணிக்காக விளையாடிய இவர் உள்ளூர் தொடர்களில் மும்பை அணிக்காக விளையாடி வந்தார். தற்போது ரஞ்சிக்கோப்பை தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் பரோடா அணிக்கு எதிராக இவர் வெறும் 7 மற்றும் 12 ரன்களையும், மகாராஷ்டிரா அணிக்கு எதிராக 1 மற்றும் 39 என்ற மிக மோசமான ரன்களை பதிவு செய்தார்.
சில சமயங்களில் மட்டுமே அவர் அதிரடியாக விளையாடுகின்றார். பல நேரங்களில் மோசமாக விளையாடுவதால் அவரை பலரும் குறை கூறி வந்தார்கள். இப்படி ஒரு பக்கம் மோசமாக விளையாடும் நிலையில் மறுபக்கம் ஒதுங்கினமாகவும் மிகத் திமிராகவும் ந டந்து கொள்வதாக புகார் வரத் தொடங்கியது. பயிற்சிக்கு ஸ்ரேயாஸ் ஐயர், கேப்டன் ரகானே, சர்துல் தாகூர் போன்ற வீரர்கள் சரியான நேரத்தில் வரும்போது பிரித்வி ஷா மட்டும் எப்போதும் தாமதமாகத்தான் வருகின்றார்.
இது குறித்து கேள்வி கேட்டால் திமிராக பதில் கூறுகிறார் என தகவல் வெளியானது. பிரித்வி ஷாவுக்கு உடல் எடையும் தற்போது அதிகரித்து இருப்பதால் பிட்னஸ்க்கான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று மும்பை அணி அவரிடம் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் அதற்கு பிரித்வி ஷா தரப்பில் இருந்து எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் வழக்கமான பயிற்சியை கூட அவர் ஒழுங்காக செய்வதில்லை என்று புகார் எழுந்தது.
இந்நிலையில் மும்பை தேர்வு குழு பிரித்வி ஷா இனி உடல் எடையை குறைத்து முழு பிட்னஸ் எட்டினால் தான் மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று முடிவு செய்து ரஞ்சிக்கோப்பை அணையில் இருந்து தற்போது பிரித்வி ஷாவை விடுவிப்பதாக தெரிவித்து இருக்கின்றது. இந்த செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஜெர்மன் நாட்டில் நர்ஸ் வேலைக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. செவிலிய உதவியாளர், நலன் கொடுப்போர் வேலைகளுக்கான…
வாஸ்கோடகாமா ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.…
சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர…
இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…
ஐக்கிய அரபு எமீரகத்தில் பெண்களுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தது. தொடர் துவங்கும் முன்னர்…
18-வது முறையாக இரட்டை சதம் அடித்து புஜாரா சச்சின், பிராட்மேன் போன்ற ஜாம்பவான் பட்டியலில் இணைந்திருக்கின்றார். 90-வது ரஞ்சி கோப்பை…