Categories: latest newstamilnadu

ரேஷன் கடைகளில் வழங்கும் பருப்பு, பாமாயில் விலை உயர்கிறதா…? அதிர்ச்சியில் மக்கள்…!

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் விலை உயர வாய்ப்புள்ள தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழகத்தில் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இருக்கிறார்கள். இதில் ஒரு கோடியே 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம் மாதம் ரேஷன் கடைகளில் சமையல் எண்ணெய், துவரம் பருப்பு போன்றவற்றை குறைந்த விலையில் வாங்கி வருகிறார்கள். மக்களின் நலனை கருத்தில் கொண்டு வெளிச்சந்தையில் அதிக விலைக்கு கொள்முதல் செய்து மிக மிக குறைந்த மானிய விலையில் தமிழக அரசு மக்களுக்கு வழங்கி வருகின்றது.

அதன்படி துவரம் பருப்பு ஒரு கிலோ 30 ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படுகின்றது. சமையல் எண்ணெய் ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கு கொடுக்கப்படுகின்றது. கடந்த ஏப்ரல் 2007 ஆம் ஆண்டு முதல் துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது கடந்த 2 மாதங்களாக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு பாமாயில் கிடைக்கவில்லை என்று மக்கள் புகார் தெரிவித்து வருகின்றார்கள்.

அடுத்ததாக ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு பாமாயில் கொள்முதல் செய்யவில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. வெளிச்சந்தையில் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளதால் தமிழக அரசு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலையில் இருக்கின்றது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 1800 கோடி கொடுத்து கொள்முதல் செய்து வந்த நிலையில் தற்போது அதன் மானிய தொகை 3800 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் துவரம் பருப்பு பாமாயில் ஆகிய இரண்டு பொருள்கள் விலை உயர்வு காரணமாக தமிழக அரசுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் காலத்தில் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விலை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகின்றது.

Ramya Sri

Recent Posts

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

1 hour ago

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

2 hours ago

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

2 hours ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

3 hours ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

3 hours ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

4 hours ago