எஃப்.எம்.ஜி.இ எனப்படும் மருத்துவர்களுக்கான நுழைவுத்தேர்வு வினாத்தாள், விடையுடன் விற்பனைக்கு இருப்பதாக வெளியான சோசியல் மீடியா போஸ்ட் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பினைப் படிப்பதுண்டு. அப்படி படித்துவிட்டு இந்தியா திரும்பும் மாணவர்கள், உள்நாட்டில் மருத்துவராகப் பணியாற்ற வேண்டும் என்றால் எஃப்.எம்.ஜி.இ எனப்படும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.
இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, இந்தியாவில் மருத்துவராக அவர்கள், தங்களைப் பதிவு செய்துகொள்ள முடியும். அப்படியான, இந்த முக்கியத் தேர்வு ஜூலை 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தநிலையில், இந்தத் தேர்வின் வினாத்தாள், விடையுடன் தங்களிடம் விற்பனைக்கு உள்ளதாக ஒரு கும்பல் டெலிகிராம் குரூப்களில் சமீபத்தில் பதிவிட்டது.
இந்த விவகாரம் வெளியாகி கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கேரள போலீஸார் இது தொடர்பாக வழக்குப் பதிந்து, விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறார். தேசிய தேர்வு முகமை நடத்திய நீட், நெட் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் வெளியாகி நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கேரளாவில் அம்பலமான இந்த முறைகேடும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமா மற்றுமன்றி இந்தியத் திரை உலகத்திலேயும் முன்னனி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். பஸ் கண்டக்டராக இருந்தவர் தனது திறமையாலும்,…
கடந்த செப்டம்பர் மாதம் முழுவதுமாகவே தடுமாற்றத்தை சந்தித்து வந்தது சென்னையில் விற்கப்பட்டு வந்த இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின்…
தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் அன்மையில் செய்யப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக…
குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேலடுக்கு வளி மண்டங்களில் குளிர்ச்சியான நிலை நிலவுவதன் காரணமாகவே தமிழகத்தில் மழை பெய்யத் துவங்கியது…
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது வங்கதேச கிரிக்கெட் அணி. மூன்று இருபது ஓவர் போட்டி தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட்…
இந்தியாவில் அரசு சார்பில் ஏராளமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மிகமுக்கிய திட்டங்களில் ஒன்றாக ரேஷன் திட்டம் உள்ளது. இந்தத்…