Categories: indialatest news

ஆஜரான ராகுல் காந்தி…அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட விசாரணை…

நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சுல்தான்பூர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். இதனை அடுத்து இந்த வழக்கின் மீதான விசாரணையை அடுத்த மாதம் பன்னிரெண்டாம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது நீதிமன்றம்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2018ம் ஆண்டு  சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார் ராகுல் காந்தி. பிரச்சாரத்தின் போது உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை கொலை வழக்கின் குற்றவாளி என சொல்லியிருந்தார். இவரது இந்த கருத்து தொடர்பாக உத்திர பிரதேச பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் விஜய் மிஸ்ரா சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது வழக்கு தொடர்ந்தார்.

Amit shah

2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராகுல் காந்திக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது கோர்ட். இதனால் கடந்த பிப்ரவரி மாதம் இருபதாம் தேதி சுல்தான்பூர் எம்.பி., எம்.எல்.ஏக்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் ராகுல் காந்தி. அதனைத் தொடர்ந்து ஜாமீன் கோரியிருந்தார் ராகுல் காந்தி. அவரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. அதே போல் ஜுலை இருபத்தி ஆறாம் தேதியான இன்றைய தினம் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் ராகுலுக்கு உத்தரவிட்டிருந்தது.

கோர்ட் உத்தரவின் படி இன்று சுல்தான்பூர் எம்.பி., எம்.எல்.ஏக்கள் நீதி மன்றத்தில் நேரில் ஆஜரானார் ராகுல் காந்தி. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் மீதான விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்ட் ) பன்னிரெண்டாம் தேதிக்கு ஒத்திவைத்து. அன்றைய தினம் ராகுல் காந்தி நேரில் ஆஜராகத் தேவையில்லை என சொல்லியுள்ளதாக கோர்ட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

sankar sundar

Recent Posts

ரூ. 500-க்கு கிடைக்கும் கியாஸ் சிலிண்டர் பற்றி தெரியுமா?

இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…

15 mins ago

இந்திய புழக்கத்தில் ரூ. 10,000 நோட்டு.. இந்த விஷயம் தெரியுமா?

இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…

30 mins ago

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

3 hours ago

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

4 hours ago

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

4 hours ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

5 hours ago